வேலைவாய்ப்பு முகாம்


டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு (கலைஞர் 100 விழாவை முன்னிட்டு 2023-2024ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் 100 சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு, விழுப்புரம் மாவட்டத்திற்கு நான்கு மாபெரும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்திட ஒதுக்கீடு செய்யப்பட்டு, மூன்று மாபெரும் சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் நான்காம் நிகழ்வாக 13.022024 (செவ்வாய்க்கிழமை) அன்று விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறப்பு மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 9.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை விழுப்புரத்திலுள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.


150க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் 


இம்முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளைச் சார்ந்த 150க்கும் மேற்பட்ட முன்னனி தனியார் வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களின் காலிப்பணியிடங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வுசெய்யவுள்ளனர்.


கல்வி தகுதி 


நடைபெறவிருக்கும் இம்முகாமில் 8 ஆம் வகுப்பு 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்வித்தகுதியினை உடையவர்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.


முன்பதிவு 


இச்சிறப்பு மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைநாடுநர்களும் www.inprivatejobstn.gov.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது. முகாம் தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது  தொலைபேசி (04146-226417), 9499055906 வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.


எனவே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் வேலையளிக்கும் தனியார்துறை நிறுவனங்கள் 13.02.2024 (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை பயன்படுத்திக் கொள்ளுமாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர். சி.பழனி, அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.