இந்திய அஞ்சல் துறை 44,228 காலியிடங்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இது நாடு முழுவதும் உள்ள அஞ்சல் நிலையங்களில் காலியாக உள்ள கிராமின் தாக் சேவக் (Gramin Dak Servaks) பணியிடங்களுக்கானது. தமிழ்நாட்டில் மட்டும் 3,789 பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளன. 


பணி விவரம்:


Gramin Dak Servaks -கிராமின் தாக் சேவக் 



  • Branch Postmaster (BPM)/Assistant Branch

  • Postmaster (ABPM)/Dak Sevaks


மொத்த காலியிடங்கள்: 44,228 பணியிடங்கள்


தமிழ்நாடு - 3,789 பணியிடங்கள்


தமிழ்நாடு, ஆந்திரபிரதேசம், அசாம், பிஹார், சத்தீஷ்கர், டெல்லி, குஜராத், ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட, கர்நாடகா, கேரலா, மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, வட கிழக்கு மாநிலங்கள், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தெலங்கானா, உத்தரபிரதேஷ், உத்தரகண்ட், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் உள்ள தபால் நிலையங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட இருக்கின்றன. 


ஊதிய விவரம்:


 Branch Postmaster (BPM) - ரூ.12,000 - ரூ.29.380/-


Assistant Branch Postmaster (ABPM)/Dak Sevaks] -ரூ.10,000 - ரூ.24,470/-


கல்வித் தகுதி:


10-ம் வகுப்பு:


இந்த காலிப் பணியிடங்களுக்கு 10-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் மூலம் கம்யூட்டர் உருவாக்கும் மெரிட் லிஸ்ட் வைத்து தேர்வு செய்யப்படுபவர்கள். பின்னர், அந்த மெரிட் லிஸ்டின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். அதனால்  பத்தாம் வகுப்பு தேர்வில் 460 அல்லது 400-க்கு மேல் எடுத்திருந்தால், நிச்சயமாக விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.


தகுதி என்ன?



  • அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்தந்த மண்டலங்களுக்கு விண்ணபிப்பவர்கள் மாநிலங்களின் உள்ளூர் மொழி பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும். இருசக்கர வாகனம், சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

  • வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.

  • சுய தொழில் செய்பவர்கள், வேலை தேடுபவர்கள், ஆயுள் காப்பீட்டின் முன்னாள் முகவர்கள், முன்னாள் படை வீரர்கள் மற்றும் தகுதியுள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம்.


வயது வரம்பு விவரம்:


விண்ணப்பத்தாரர்கள் 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.


தேர்வு செய்யப்படும் முறை:


ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் விகிதங்களின்படி தகுதியானவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு அதனடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பிக்கும் முறை:


https://indiapostgdsonline.gov.in/ -என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பக் கட்டணம்:


பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. பழங்குடியின/ பட்டியலின பிரிவினர், மகளிர், Transwomen ஆகியோர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை ஆஃப்லைன் அல்லது ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.


விண்ணப்பிப்பது எப்படி?


இதற்கு விண்ணப்பிப்பதற்கு அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கமான https://indiapostgdsonline.gov.in/ -  சென்று அதில் கிடைக்கும் வழிகாட்டுதலை பின்பற்றினாலே போதும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று படி நிலைகள்,



  • ரிஜிஸ்ட்ரேஷன் (பதிவு செய்தல்): முதலில் வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர் பதிவு செய்து தனிப்பட்ட பதிவு எண்ணைப் (Unique Registration Number) பெற வேண்டும்.

  • கட்டணம் செலுத்துதல் UR/OBC/EWS ஆகியவற்றில் ஆண்கள்/திருநம்பிகள் ஆகியோர் கட்டணம் செலுத்த வேண்டும். ஆன்லைனில் பணம் செலுத்தும் போது, விண்ணப்பதாரரின் வங்கிக் கணக்கிலிருந்து தொகையை எடுத்துக்கொண்ட பின் எந்த உறுதிப்படுத்தலும் கிடைக்கவில்லை என்றால், விண்ணப்பதாரர் பதிலுக்காக 72 மணிநேரம் வரை காத்திருக்கலாம்.

  • விண்ணப்ப கட்டணத்தை செலுத்த மாநில / மாவட்டங்களில் உள்ள எல்லா தலைமை தபால் அலுவலகத்திலும் நேரடியாக பணம் செலுத்தலாம்.

  • ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு, விண்ணப்பத்தை நிரப்பவும். பின் ஆவணங்களைப் பதிவேற்றவும். பின்னர் அஞ்சல் அலுவலக விருப்பங்களைச் சமர்ப்பிக்கவும். உங்கள் விண்ணப்பத்தை சரி பார்த்து விட்டு, பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும். இந்த மூன்று படிகளை முடித்தால், விண்ணப்பம் செய்தல் நிறைவு பெறும்.


விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.08.2024


முழு அறிவிப்பை  https://indiapostgdsonline.cept.gov.in/Notifications/Model_Notification.pdfஎன்ற இணைப்பைக் க்ளிக் செய்து காணலாம்.


மண்டலங்கள் முறையே உள்ள காலியிடங்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை அறிய https://indiapostgdsonline.gov.in/  - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.


தமிழ்நாட்டில் உள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை மண்டலம் வாரிய தெரிந்து கொள்ள https://indiapostgdsonline.cept.gov.in/HomePageS/D19.aspx - என்ற இணைப்பை க்ளிக் செய்து 'Select Division' என்பதில் கொடுக்கப்பட்டுள்ளவற்றில் (மத்திய சென்னை, தென் சென்னை, வேலூர், திருச்சிராப்பள்ளி) தெரிவு செய்து விவரங்களை காணலாம்.