Post Office: முதன்மை அஞ்சல் அதிகாரி அலுவுலகத்தில் 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு 


சென்னை அண்ணாசாலையில் உள்ள முதன்மை அஞ்சல் அதிகாரி அலுவலகம் தற்போது அஞ்சலக ஆயுள் காப்பீட்டுப் பத்திரங்கள் விற்பனை மற்றும் ஊரக அஞ்சலக ஆயுள் காப்பீட்டு பத்திரங்கள் விற்பனை செய்ய நேரடி முகவர்களை பணிநியமனம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதற்கான நேர்முக தேர்வு வரும் 28ம் தேதி நடைபெறவுள்ளது.


நடைபெறும் நேரம் காலை : 11.00 மணி,


நடைபெறும் இடம்: முதன்மை அஞ்சல் அதிகாரி அலுவலகம், அண்ணாசாலை, சென்னை.  கொடுக்கப்பட்டுள்ள தகுதிகள் உள்ளவர்கள் இந்த நேர்முக தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். 


யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?


நேரடி முகவர்கள் பணிக்கு விண்ணப்பிக்க 10 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  இளைஞர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர்கள், மகிளா மண்டல ஊழியர்கள், காப்பீட்டு பத்திரங்கள் விற்பனையில் முன் அனுபவம் உள்ளவர்கள், படித்து முடித்த விட்டு வேலைவாய்ப்பு இல்லாதவர்கள், சுயதொழில் / சுய வேலை  செய்பவர்கள் உள்ளிட்டோர் இந்த நேர்முக தேர்விற்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். 18 வயது முதல் 50 வயது வரை உள்ள ஆர்வமுள்ள நபர்கள் இந்த நேரடி முகவர்கள் பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ளவர்கள்.



நேர்முக தேர்விற்கு என்ன எடுத்து செல்ல வேண்டும்? 


நேர்முக தேர்வை எழுத வருவோர் தங்களை பற்றின விவரங்கள்  - பெயர், முகவரி, தொலைபேசி எண் பற்றின குறிப்பு கொண்டு வர வேண்டும். அதனோடு கல்வி சான்றிதழ், வயது சான்றிதழ், அனுபவ சான்றிதழ் (முன் அனுபவம் உள்ளவர்கள் மட்டும்), 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் ஆகியவற்றை நேர்முக தேர்வின் போது கொண்டு வரவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் ரூ. 5,000 பாதுகாப்பு வைப்புத் தொகையை  கிசான் விகாஸ் பத்திர வடிவில் அல்லது  தேசிய சேமிப்பு பத்திரம் மூலம் செலுத்த வேண்டும் என முதன்மை அஞ்சல் அதிகாரி வெளியிட்ட செய்தி குறிப்பில் விவரிக்கப்பட்டுள்ளது.


யார் விண்ணப்பிக்க தகுதி இல்லாதவர்கள்:


வேறு காப்பீட்டு நிறுவனங்களில் தற்போது காப்பீட்டுப் பத்திரங்கள் விற்பனை செய்துவரும் முகவர்கள் இந்த அஞ்சலக ஆயுள் காப்பீட்டுப் பத்திரங்கள் விற்பனை செய்ய நேரடி முகவர்களாக விண்ணப்பிக்க முடியாது. 


கூடுதல் வாய்ப்பு யாருக்கு?


மேலும் கணினி பற்றின அறிவு, முன் அனுபவம் மற்றும் உள்ளூர் பற்றின போதுமான அறிவு  உள்ளவர்கள் விண்ணப்பித்தால்  கூடுதல் தகுதிகளாக கருதப்பட்டு அவர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படும். 


தகுதியும், ஆர்வமும் உள்ள யார் வேண்டுமானாலும் இந்த அஞ்சலக ஆயுள் காப்பீட்டுப் பத்திரங்கள் விற்பனை செய்யும் நேரடி முகவர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.