திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆதி திராவிடர் நலத்துறையில் (Dindigul Adi Dravida Welfare Recruitment) காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

அறிவிப்பின் படி, மனித கழிவுகளை மனிதனே அகற்றும் தொழில்புரிவோர்கள் தடுப்பு மற்றும் அவர்களின் மறுவாழ்வுக்கான சட்டம் குறித்து மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவில் உறுப்பினராக சமூக ஆர்வலர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் மனித கழிவுகளை மனிதனே அகற்றும் தொழில்புரிவோர்கள் தடுப்பு மற்றும் அவர்களின் மறுவாழ்வுக்கான சட்டம் 2013-ன் படி மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு அமைக்கப்படவுள்ளது.


விவரம்:


இந்தக் குழுவில் உறுப்பினர்களாக சேர விரும்பும் திண்டுக்கல் மாவட்டத்தில் வசிக்கும் சமூக ஆர்வலர்கள், அவர்களின் முழு விபரத்துடன் (செய்தி வெளியான 15 நாட்களுக்குள்) திண்டுக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளையே இதற்கு கடைசி நாள். 


தொடர்புக்கு:


மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., 


Thiagi Subramania Siva Malihai,


Velu Nachiyar Valaham,


Chettinaickenpatti, Dindigul,


Tamil Nadu 624004


டிவிட்டர்- https://twitter.com/collectoratedgl?s=20&t=9yrHLjzm08hkrwdmIJCldw


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.