BSF ல் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்.. தகுதியுள்ள பட்டதாரிகள் உடனே அப்ளை பண்ணிடுங்க!

விண்ணப்பதாரர்களுக்கு முதலில் எழுத்துத்தேர்வு நடைபெறம். பின்னர் உடல் தகுதி தேர்வு  மற்றும் மருத்துவ தகுதி தேர்வுகளில் தேர்ச்சிபெற வேண்டும். 

Continues below advertisement

எல்லைப்பாதுகாப்பு படையில் காலியாக உள்ள உதவி ஆய்வாளர், இளநிலை பொறியாளர், ஆய்வாளர் என காலியாக உள்ள 90 பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள இளைஞர்கள் உடனடியாக இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளவும்.

Continues below advertisement

இந்திய ராணுவத்தில் ஏதாவது பிரிவில் சேர்ந்துப்பணியாற்ற வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் இளைஞர்களுக்காகவே தற்போது எல்லைப்பாதுகாப்பு படையில் பணியாற்றுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்திய சர்வதேச எல்லைப்பகுதிகளைப்பாதுகாக்கும் மத்திய காவல் ஆயுதப்படைகளில் ஒன்றாக எல்லைப்பாதுகாப்புப் படை இயங்கிவருகிறது. இந்திய துணை ராணுவங்களில் ஒரு பிரிவாகக் கருதப்படும் இப்படை கடந்த 1965 ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி உருவாக்கப்பட்டது. இதோடு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இப்படைப்பிரிவின் முக்கிய பணி, எல்லை ஊடுருவலைத் தடுப்பதும், எல்லையைப் பாதுகாப்பதுமாக உள்ளது.தற்போது எல்லைப்பாதுகாப்பு படையில் உதவி ஆய்வாளர், இளநிலை பொறியாளர், ஆய்வாளர் போன்ற பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க என்னென்ன தகுதிகள்? விண்ணப்பிக்கும் முறை? குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக்கொள்வோம்.

BSF ல் பல்வேறு பணியிடங்களுக்கானத் தகுதிகள்:

உதவி ஆய்வாளர் -57

கல்வித்தகுதி – பொறியியல் துறையில் சிவில் பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.

சம்பளம் – மாதம் ரூ.35, 400- 1,12,400

இளநிலை பொறியாளர்- 32

கல்வித்தகுதி – எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் பிரிவில் பட்டயப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

ஆய்வாளர் கட்டிடக்கலை – 1

கல்வித்தகுதி -

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், https://rectt.bsf.gov.in/#bsf-current-openings என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்:

இப்பணியிடங்களுக்கு அனைத்து வகுப்பைச்சேர்ந்த பெண்கள், பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடியினருக்கு கட்டண சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

மற்ற பிரிவினர் இணையவழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கும் போது, ரூ.200 தேர்வுக்கட்டணமாக செலுத்த வேண்டும்.

வயது வரம்பு:

2022 ஜூன் மாதம் 8 ஆம் தேதியின்படி,  அதிகபட்ச வயது வரம்பு 30 ஆக நிர்ணயம். ஆனால் பழங்குடியினருக்கு வயது வரம்பிற்கு மேல் 5 ஆண்டுகள் வரை வயது வரம்பில் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யும் முறை:

மேற்கண்ட முறைகளில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு முதலில் எழுத்துத்தேர்வு நடைபெறம். பின்னர் உடல் தகுதி தேர்வு  மற்றும் மருத்துவ தகுதி தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற வேண்டும்.  இதனையடுத்து விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே ஆர்வமுள்ள பட்டதாரிகள் உடனடியாக விண்ணப்பித்துப் பயன்பெறுங்கள். மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விவரங்களை, https://rectt.bsf.gov.in/ என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாக அறிந்துக்கொள்ளுங்கள்.

Continues below advertisement
Sponsored Links by Taboola