அருள்மிகு பழனியாண்டவர் கலை பண்பாட்டு கல்லூரி (Arulmigu Palaniandavar College of Arts and Culture – APCAC) காலியாக உள்ள உதவி பேராசிரியர், ஆய்வக உதவியாளர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்னப்பிக்க அடுத்த மாதம் 9-ம் தேதி கடைசி தேதியாகும்


பணி விவரம்


உதவி பேராசிரியர்


ஆய்வக உதவியாளர்


துறை விவரம்:


வணிகவியல்


இந்திய கலாச்சாரம்


பொருளாதாரம்


விலங்கியல்


ஆங்கிலம்


வரலாறு


இயற்பியல்


பணியிடம் 


இதற்கு தேர்வு செய்யப்படுபவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அலுவலகத்தில் பணியமர்த்தப்படுவர். 


கல்வித் தகுதி:


இதற்கு விண்ணப்பிக்க யு.ஜி.சி. அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் சம்பந்தப்பட்ட துறை முதுகலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  பி.எச்.டி. படித்திருக்க வேண்டும்.


NET/SLET/SET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்


விண்ணப்பிப்பது எப்படி?


இதற்கு தேவையான ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி- 09.10.2023


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி


The Secretary,


Arulmigu Palaniandavar College of Arts and Culture,


Plani, -624 601


இதற்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு நேர்காணல் குறித்த தகவல் அனுப்பப்படும். 


****


டெல்லி காவல் துறையில்  காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான அறிவிப்பை அரசு பணியாளர் தேர்வாணையம் (The Staff Selection Commission) வெளியிடப்பட்டுள்ளது. 


பணி விவரம்


கான்ஸ்டபிள் (ஆண், பெண்)


பெண்கள் -2,491


மொத்த பணியிடங்கள் - 7547 


எப்படி விண்ணபிப்பது?


https://ssc.nic.in - என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பக் கட்டணம்:


இதற்கான விண்ணப்பக் கட்டணமா ரூ.100 செலுத்த வேண்டும். பழங்குடியினர்/ பட்டியில் பிரிவினர்,  முன்னாள் ராணுவத்தினர்,  மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 


கல்வித் தகுதி:


இதற்கு விண்ணப்பிக்க 12-ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; LMV பணியிடத்திற்கு விண்ணப்பிக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். 


வயது வரம்பு :


இதற்கு விண்ணப்பிக்க 01.07.2023 படி 18 வயது நிரம்பியவர்களாகவும் 25 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். 


விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:



  • முதலில் Notices | Staff Selection Commission | GoI (ssc.nic.in) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
    home page- ல் Apply என்பதை கிளிக் செய்யவும்.

  • SSC Constable Post’, Apply என்பதை கிளிக் செய்யவும்

  • முதல் முறை விண்ணப்பம் செய்வோர் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பின் பயனாளர் ஐடி உருவாக்கப்படும் 

  • ஐடி உருவாகியதையடுத்து, லாக் இன் செய்து அப்ளை செய்யவும்

  • புதிதாக உள்ள விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ளவற்றுக்கு சரியான தகவல்களை பூர்த்தி செய்யவும் 

  • விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன், விண்ணப்ப கட்டணம் செலுத்தி, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்


தேர்வு செய்யப்படும் முறை:


கணினி வழியில் நடைபெறும் எழுத்துத் தேர்வு நடைபெறும்.  இதில், தேர்ச்சி பெற்றவர்கள் உடற்தகுதி தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். 


முழு விவரம் அறிய 


https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Final_Notice_CEDP2023_01092023.pdf - என்ற லிங்கை கிளிக் செய்யவும்.


எழுத்துத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில், இந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 


விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.09.2023


முக்கியமான நாட்கள்:


 



ஆன்லைனில் தேர்வு கட்டணம் செலுத்த கடைசி நாள் - 30.09.2023 - இரவு 11 மணி வரை


விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய கடைசி நாள் - 30.10.2023 - 04.10.2023 இரவு 11 மணி வரை


ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் - டிசம்பர், 2023 (எழுத்துத் தேர்வு தேதி குறித்த விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.)