Just In

சுகாதார துறையில் அரசு வேலை; இன்று முதல் விண்ணப்பிக்கலாம் ; முழுவிவரம் உள்ளே !

Govt Jobs: வாக்களிச்சவங்களுக்கு மறக்க முடியாத தண்டனை; ஆண்டுக்கு 50 ஆயிரம் பேர் ஓய்வு; 5 வருஷமா என்ன செஞ்சீங்க? அன்புமணி விளாசல்!

Deputy Tahsildar Job: 30 துணை தாசில்தார் காலி பணியிடங்கள்... முழு விவரம் உள்ளே !

பொறியியல் பட்டதாரியா? உணவு, இருப்பிடத்துடன் வெளிநாட்டு வேலை- ரூ.80 ஆயிரம் சம்பளம்- விண்ணப்பிப்பது எப்படி?

TNPSC Group 4 Exam 2025: கடைசி நாள், 3935 அரசுப் பணியிடங்கள் - ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
TNPSC Job: அடிச்சதுடா ஜாக்பாட் - தமிழக அரசில் 709 காலிப்பணியிடங்கள், எப்போது, எப்படி விண்ணப்பிக்கலாம் - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
Agnipath Scheme: அக்னிவீர் திட்டத்தில் ஆட்சேர்ப்பு; பணிகள் என்ன? எப்படி பதிவு செய்வது?
அக்னி வீர் திட்டத்தில் சேர இணையதளம் மூலம் அல்லது முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரில் அணுகி விவரம் பெற்றிடலாம்.
Continues below advertisement

ராணுவ வீரர் பயிற்சி
அக்னிவீர் திட்டத்தில் ஆட்சேர்ப்பு தேர்விற்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
அக்னிவீர் திட்டத்தில் ஆட்சேர்ப்பு
இந்திய ராணுவ வீரர்களைத் தேர்வு செய்வதற்காக, அக்னிபத் என்று இந்தியில் அழைக்கப்படும் ‘அக்னி பாதை’ என்ற திட்டத்தை பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டுவந்தது. அக்னி பாதை திட்டத்தின் கீழ் சேரும் வீரர்கள், அக்னி வீரர்கள் (அக்னி வீர்) என்று அழைக்கப்படுவார்கள் எனவும் இந்த வீரர்கள் மொத்தம் 4 ஆண்டுகள் இந்திய ராணுவத்தின் முப்படை எனப்படும் தரைப் படை, கப்பல் படை, விமானப் படைகளில் பணியாற்றுவர் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டதின் கீழ் பல இளைஞர்கள் பணிக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.
பணிகள் என்ன?
இந்நிலையில் திருச்சி இராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகத்தின் மூலம், 2025-2026 ஆம் ஆண்டுக்கு அக்னி வீர் திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்த இளைஞர்களுக்கு பொதுப்பணி, டெக்னிக்கல், கிளார்க், ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் மற்றும் டிரேட்ஸ்மென் ஆகிய பிரிவுகளில் இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது.
எப்படி பதிவு செய்வது?
அக்னி வீர் திட்டத்தில் சேர விருப்பமுள்ள இளைஞர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் 12.03.2025 முதல் 10.04.2025 வரை பதிவு செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் இது தொடர்பாக கல்வி தகுதி மற்றும் கூடுதல் விவரங்கள் தேவைப்படுவோர் திருவில்லிபுத்தூரிலுள்ள முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரில் அணுகி விவரம் பெற்றிடலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் வீ.ப.ஜெயசீலன், தெரிவித்துள்ளார்.
அக்னி வீர் திட்டத்தில் சேர விருப்பமுள்ள இளைஞர்கள் www.joinindianarmy.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - தமிழ்நாட்டில் ஓர் ஆடு ஜீவிதம்.. 20 ஆண்டு கொத்தடிமை மீட்கப்பட்ட பின்னணி?
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Crime: மதுரைக்கு வந்த 8 கிலோ கஞ்சா.. கைது செய்யப்பட்ட சிறுவனுக்கு பின்னால் போதை கும்பல் ?
Continues below advertisement
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் வேலைவாய்ப்பு செய்திகளைத் (Tamil Employment News) தொடரவும்.