8ம் வகுப்பு படிச்சிருந்தா போதும்.. மாதம் ரூ.8 ஆயிரம்..! அள்ளிக் கொடுக்கும் தமிழக அரசு

தொழிற்‌ பழகுநராக சேர்க்கை செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு மாதாந்திர உதவித்‌ தொகையாக குறைந்தபட்சம்‌ ரூ.8000 வழங்கப்பட உள்ளது.

Continues below advertisement

ஐ.டி.ஐ. படித்த தொழில் பழகுநர்களுக்கு மாதாமாதம் குறைந்தபட்சம் 8 ஆயிரம் உதவித் தொகை அளிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதைப் பெறுவது எப்படி? என்ன தகுதி தேவை? பார்க்கலாம்.

Continues below advertisement

தமிழக அரசு சார்பில் கல்விக்கும் வேலைவாய்ப்புக்கும் பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தொழிற்‌ பழகுநராக சேர்க்கை செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு மாதாந்திர உதவித்‌ தொகையாக குறைந்தபட்சம்‌ ரூ.8000 வழங்கப்பட உள்ளது.

எப்படி உதவித்தொகை வழங்கப்படுகிறது?

ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு மாவட்ட அளவிலான தேசிய தொழிற்‌ பழகுநர்‌ பயிற்சி முகாம்‌ வருகிற 11.11.2024 அன்று நடைபெற உள்ளது. மாவட்ட திறன்‌ பயிற்சி அலுவலகம்‌, சென்னை மற்றும்‌ இந்திய அரசு, தென்மண்டல திறன்‌ மேம்பாடு மற்றும்‌ தொழில்‌ முனைவு இயக்ககம்‌ இணைந்து இதை நடத்துவதாக சென்னை மாவட்ட ஆட்சியர்‌ ரஷ்மி சித்தார்த்‌ ஐகடே தெரிவித்துள்ளார்‌.

 இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

’’மாவட்ட திறன்‌ பயிற்சி அலுவலகம்‌, சென்னை மற்றும்‌ இந்திய அரசு, தென்மண்டல திறன்‌ மேம்பாடு மற்றும்‌ தொழில்‌ முனைவு இயக்ககம்‌ இணைந்து ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு மாவட்ட அளவிலான தேசிய தொழிற்‌ பழகுநர்‌ பயிற்சி முகாம்‌ நடத்த உள்ளது.

பல்வேறு தொழிற்‌ பிரிவுகளை சேர்ந்த பயிற்சியாளர்களுக்கு தொழிற்‌ பழகுநர்‌ பயிற்சி வழங்குவதற்காக, மாவட்ட அளவிலான தேசிய தொழிற்‌ பழகுநர்‌ முகாம் (PM National Apprenticeship Mela) வருகிற 11.11.2024 அன்று காலை 9.00 மணியளவில்‌ ஆர்‌.கே.நகர்‌, அரசினர்‌ தொழிற்‌ பயிற்சி நிலையத்தில்‌ (வட சென்னை அரசினர்‌ தொழிற்‌ பயிற்சி நிலைய வளாகத்தில்‌) நடைபெற உள்ளது.

8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்

இதில்‌ அரசு மற்றும்‌ தனியார்‌ தொழிற்‌ நிறுவனங்கள்‌ கலந்து கொண்டு தொழிற்‌ பழகுநர்‌ பயிற்சி வழங்க ஐ.டி.ஐ. படித்து தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள்‌ மற்றும்‌ 8, 10, 12 ஆம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களை தொழிற்‌ பழகுநராக தேர்வு செய்ய உள்ளனர்‌.

மாதாந்திர உதவித்‌தொகை ரூ.8000

தற்போது தொழிற்‌ பழகுநராக சேர்க்கை செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு மாதாந்திர உதவித்‌ தொகையாக குறைந்த பட்சம்‌ ரூ.8000/- மற்றும்‌ தேசிய தொழிற்‌ பழகுநர்‌ சான்றிதழ்‌  (National Apprenticeship Certificate) வழங்கப்படும்‌.

முகாமில் கலந்துகொள்வது எப்படி?

 இதுவரை தொழிற்‌ பழகுநர்‌ பயிற்சி (NAC) முடிக்காத அரசு, தனியார்‌ தொழிற்‌ பயிற்சி நிலையங்களில்‌ தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் www.apprenticeshipindia.gov.in என்னும் இணையதள முகவரியில்‌ பதிவு செய்ய வேண்டும்.

எனினும், அசல்‌ கல்வி சான்றிதழ்களுடன்‌ இந்த முகாமில்‌ கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்‌ கொள்ளப்பட்டுள்ளது.

கூடுதல் தகவல்களுக்கு: www.apprenticeshipindia.gov.in 

Continues below advertisement
Sponsored Links by Taboola