சென்னை: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் பணிபுரிய வேண்டும் என்ற கனவு கொண்ட பட்டதாரிகளுக்கு அருமையான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Continues below advertisement

இஸ்ரோ நிர்வாகப் பிரிவில் காலியாக உள்ள 242 பணியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் முக்கியமான விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றுவதற்கான சிறப்பான வாய்ப்பு என்பதால், தகுதியும் ஆர்வமும் உள்ள பட்டதாரிகள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இஸ்ரோவில் காலியாக உள்ள பணியிடங்களில் உதவியாளர் பதவிக்கு 120 பணியிடங்களும், மேல்நிலை எழுத்தர் பதவிக்கு 76 பணியிடங்களும், இளநிலை நேர்முக உதவியாளர் பதவிக்கு 22 பணியிடங்களும், சுருக்கெழுத்தர் பதவிக்கு 24 பணியிடங்களும் என மொத்தம் 242 பணியிடங்கள் இடம்பெற்றுள்ளன.

Continues below advertisement

பட்டதாரிகளுக்கு சிறப்பான வாய்ப்பு

உதவியாளர் மற்றும் மேல்நிலை எழுத்தர் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். அதனுடன் கணினியைப் பயன்படுத்துவதற்கான அடிப்படை அறிவும் பெற்றிருக்க வேண்டும்.

இளநிலை நேர்முக உதவியாளர் மற்றும் சுருக்கெழுத்தர் பணிகளுக்கு பட்டப்படிப்புடன், சுருக்கெழுத்துப் பயிற்சி பெற்றிருப்பது அவசியம். மேலும், சுருக்கெழுத்தில் நிமிடத்துக்கு 60 வார்த்தைகள் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

இதனால், கலை, அறிவியல், வணிகம் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் தங்களது கல்வித் தகுதிக்கு ஏற்ப இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க முடியும்.

இஸ்ரோவில் பணிபுரிய அருமையான வாய்ப்பு

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வரும் இஸ்ரோவில் பணிபுரிவது பல இளைஞர்களின் கனவாக உள்ளது. விண்வெளி ஆராய்ச்சி, செயற்கைக்கோள் ஏவுதல், விண்வெளி தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் உலக அளவில் இந்தியாவின் திறனை உயர்த்தி வரும் நிறுவனத்தில் நிர்வாகப் பணியில் சேருவதற்கு இந்த அறிவிப்பு சிறப்பான வாய்ப்பாக அமைந்துள்ளது.

குறிப்பாக, பட்டப்படிப்பு முடித்துவிட்டு அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு இது மத்திய அரசின் முக்கிய நிறுவனத்தில் கிடைக்கும் அருமையான வேலைவாய்ப்பாக பார்க்கப்படுகிறது. எனவே, தகுதியுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு உரிய முறையில் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு என்ன என்று தெரியுங்களா?

அனைத்து பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்க அதிகபட்ச வயது 28 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வும் வழங்கப்படுகிறது. அதன்படி, எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

இதனால், வயது தளர்வுக்கு தகுதியானவர்கள் தங்களுக்கான விதிமுறைகளை சரிபார்த்து விண்ணப்பிக்கலாம்.

எழுத்துத்தேர்வு மூலம் தேர்வு

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் அனைவரும் நேரடியாக பணிக்கு தேர்வு செய்யப்படமாட்டார்கள். விண்ணப்பதாரர்களின் தகுதியை மதிப்பிடும் வகையில் எழுத்துத்தேர்வு நடத்தப்படும். இதைத் தொடர்ந்து, பணியின் தன்மைக்கு ஏற்ப தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்துத் தேர்வுகளும் நடத்தப்படும். தேர்வு நடைமுறை, பாடத்திட்டம், தகுதி உள்ளிட்ட முழுமையான விவரங்களை விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிந்து கொண்டு தயாராக வேண்டும்.

இஸ்ரோ போன்ற முக்கியமான மத்திய அரசு நிறுவனத்தில் பணிபுரிய விரும்புபவர்கள், தேர்வுக்கு முன்கூட்டியே தயாராகி, தங்களது கல்வித் தகுதி மற்றும் திறன்களுக்கு ஏற்ற பணியிடத்தை தேர்வு செய்து விண்ணப்பிப்பது பயனுள்ளதாக இருக்கும்.

ஆகஸ்ட் 16 கடைசி நாள்... வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க

இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான பட்டதாரிகள் ஆகஸ்ட் 16-ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். கடைசி நாளில் இணையதளத்தில் ஏற்படும் தொழில்நுட்ப சிக்கல்களை தவிர்க்க, முன்கூட்டியே விண்ணப்பிப்பது சிறந்தது.

விண்ணப்பதாரர்கள் இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.isro.gov.in சென்று வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பை முழுமையாக படித்து, அதில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளின்படி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

பட்டப்படிப்பு முடித்து நல்ல அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு, இந்தியாவின் முன்னணி விண்வெளி நிறுவனமான இஸ்ரோவில் பணிபுரியும் இந்த வாய்ப்பு மிகவும் சிறப்பான வேலைவாய்ப்பாகும். மொத்தம் 242 பணியிடங்கள் இருப்பதால், தகுதியானவர்கள் தங்களது கல்வித் தகுதி, வயது மற்றும் தேவையான திறன்களை சரிபார்த்து விண்ணப்பிக்கலாம்.

இஸ்ரோவில் சிறப்பான பணி, மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றும் வாய்ப்பு, பட்டதாரிகளுக்கு ஏற்ற நிர்வாகப் பணியிடங்கள் என பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இந்த வேலைவாய்ப்பை தகுதியுள்ள இளைஞர்கள் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 242 பணியிடங்கள் இருக்கு. பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு. ஆகஸ்ட் 16- வரைக்கும் காத்திருக்காம உடனே விண்ணப்பியுங்கள்!