Trachoma - India: தெளிவான கண்பார்வை என்பது வாழ்க்கையின் விலைமதிப்பற்ற பரிசுகளில் ஒன்றாகும்.  இது அன்றாட நடவடிக்கைகள், கல்வி மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு அவசியம். இருப்பினும், ட்ரக்கோமா போன்ற பல நோய்கள் கண்பார்வைக்கு கடுமையான அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகின்றன, சிகிச்சையளிக்கப்படாவிட்டால் மீள முடியாத பார்வையிழப்புக்கு வழிவகுக்கும்.


இந்தியாவில் ட்ரோகோமா நோய் இல்லை:


உலக சுகாதார அமைப்பின் கனக்குப்படி, உலக அளவில் 150 மில்லியன் மக்கள் ட்ரக்கோமாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 6 மில்லியன் பேர் பார்வையற்றவர்கள் அல்லது பார்வை முடங்கும் சிக்கல்களின் அபாயத்தில் உள்ளனர்.


ஒரு குறிப்பிடத்தக்க பொது சுகாதார சாதனையாக, உலக சுகாதார அமைப்பு இந்தியாவை ட்ரக்கோமா இல்லாததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஒவ்வொரு நபருக்கும் ஆரோக்கியமான கண்பார்வையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, மில்லியன் கணக்கானவர்களின் பார்வையைப் பாதுகாக்க அரசின் பல கால  அர்ப்பணிப்பு முயற்சிகளுக்குப் பின்  இந்த மைல்கல் எட்டப்பட்டுள்ளது.


ட்ரக்கோமா என்றால் என்ன?


ட்ரக்கோமா என்பது கிளமிடியா ட்ராக்கோமாடிஸ் என்ற பாக்டீரியத்தின் தொற்றால் ஏற்படும் கண் நோயாகும். ட்ரக்கோமா நோய்த்தொற்றின் முதன்மை ஆதாரம் பாதிக்கப்பட்ட நபர்களின் கண் சுரப்பி  ஆகும்.



  • ஒன்றாக விளையாடுவது, படுக்கையைப் பகிர்ந்து கொள்வது (குறிப்பாக தாய்மார்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடையே).போன்ற நெருங்கிய உடல் தொடர்பு,

  • துண்டுகள், கைக்குட்டைகள், தலையணைகள் மற்றும் பிற தனிப்பட்ட பொருட்களைப் பகிர்தல்.

  • ஈக்கள் தொற்றுநோயைப் பரப்பக்கூடும்.

  • இருமல் மற்றும் தும்மல் போன்றவற்றாலும் பரவக்கூடும்

  • ட்ரக்கோமா பரவுவதை ஊக்குவிக்கும் சுற்றுச்சூழல் ஆபத்து காரணிகள் பின்வருமாறு:

  • மோசமான சுகாதார நடைமுறைகள்.

  • நெரிசலான வாழ்க்கை நிலைமைகள்.

  • போதுமான கழிப்பறைகள் மற்றும் சுகாதார வசதிகள் இல்லாமை .


இந்த ஆபத்து காரணிகளை நிவர்த்தி செய்வது நோய் மேலும் பரவுவதைத் தடுப்பதற்கு முக்கியமானது. குழந்தைகள் ட்ரக்கோமாவால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்




ட்ரக்கோமாவுக்கு எதிரான இந்தியாவின் வெற்றி


1950-கள் மற்றும் 1960-களில் ட்ரக்கோமா இந்தியாவில் ஒரு குறிப்பிடத்தக்க பொது சுகாதாரப் பிரச்சினையாக இருந்தது. குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தன. அந்தக் காலகட்டத்தில் அவற்றின் மக்கள்தொகையில் 50% க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். 1971 ஆம் ஆண்டு வாக்கில், நாட்டின் அனைத்துப் பார்வையிழப்பு  நேர்வுகளில் 5%-க்கு ட்ரக்கோமா காரணமாக இருந்தது. இந்த நெருக்கடியான பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில் இந்தியா தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டது.


1963 ஆம் ஆண்டில், இந்திய அரசு, உலக சுகாதார அமைப்பு, யுனிசெஃப் ஆகியவற்றின் ஆதரவுடன், தேசிய ட்ரக்கோமா கட்டுப்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கியது.


இது போன்ற தொடர்ச்சியான முயற்சிகள் மூலம், ட்ரக்கோமாவை ஒழிப்பதில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டது. 2017-ம் ஆண்டுவாக்கில் இந்தியா ட்ரக்கோமா தொற்றிலிருந்து விடுபட்டதாக அறிவிக்கப்பட்டது. அப்போதைய மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தேசிய ட்ரக்கோமா ஆய்வு அறிக்கையை (2014-17) வெளியிட்டபோது இந்த அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது. கணக்கெடுப்பு முடிவுகள் நம்பிக்கைக்குரியவையாக இருந்தன, கணக்கெடுக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் குழந்தைகளிடையே  ட்ரக்கோமா நோய்த்தொற்று பாதிப்பு 0.7% மட்டுமே - உலக சுகாதார அமைப்பின் நீக்குதல் வரம்பான 5%-ஐ விட மிகவும் குறைவு.


இத்தகைய குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருந்தபோதிலும், பொது சுகாதாரத்திற்கான அர்ப்பணிப்பு அத்துடன்  முடிந்துவிடவில்லை. 2019 முதல் 2024-ல் தற்போதுவரை, தொற்று மீண்டும் எழாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக அனைத்து மாவட்டங்களிலும் ட்ரக்கோமா நோய்ப்பாதிப்பை  இந்தியா தொடர்ந்து விழிப்புடன் கண்காணித்து. வருகிறது. ட்ரக்கோமா இல்லாத நிலையை பராமரிக்க இந்த தொடர்ச்சியான கண்காணிப்பு முக்கியமானது, இது தனது குடிமக்களின் கண் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும் தவிர்க்கக்கூடிய பார்வையிழப்பைத் தடுப்பதற்கும் இந்தியாவின் அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது.


ட்ரக்கோமாவுக்கு எதிரான இந்தியாவின் பயனுள்ள நடவடிக்கைகளுக்கு உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர்  டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த வெற்றியை  சாத்தியமாக்கிய அரசு, சுகாதார வல்லுநர்கள் மற்றும் சர்வதேச கூட்டாளர்களிடையே முக்கிய ஒத்துழைப்பை வலியுறுத்தினார்.


நேபாளம், மியான்மர் மற்றும் 19  நாடுகளுடன் இந்தியா இப்போது நிற்கிறது. இவை ட்ரக்கோமாவை ஒரு பொது சுகாதார பிரச்சினையாக வெற்றிகரமாக அகற்றியுள்ளன. இருப்பினும், இந்த நோய் 39 நாடுகளில் தொடர்ந்து ஒரு சவாலாக உள்ளது, இது உலகளவில் சுமார் 1.9 மில்லியன் மக்களை பாதிக்கிறது மற்றும் பல சந்தர்ப்பங்களில் மீள முடியாத பார்வையிழப்புக்கு வழிவகுக்கிறது.


ட்ரக்கோமாவை இல்லாததாக மாறுவதற்கான இந்தியாவின் பயணம் பொது சுகாதாரம் மற்றும் சமூக ஆதரவில் குழுப்பணியின் வலிமையைக் காட்டுகிறது. இந்த தீவிர கண் நோயின் விகிதத்தை நாடு வெற்றிகரமாக குறைத்துள்ளது. அரசு அமைப்புகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் சர்வதேச கூட்டாளர்களிடையே ஒத்துழைப்பு இந்த வெற்றிக்கு முக்கியமாக இருந்தது.