தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1000-ஐ நெருங்குகிறது. மேலும் தினசரி தொற்று பாதிப்பு 186-ஆக  உயர்ந்துள்ளது. நேற்றைய முன்தினம் தினசரி தொற்று பாதிப்பு 172-ஆக பதிவானது. தினசரி கொரோனா பாதிப்பு தமிழ்நாட்டில் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது.


கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1000-ஐ நெருங்குகிறது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிகை 993 ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய தினம் மட்டும் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 102 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் தமிழ்நாட்டில் 3,350 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 186 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக தமிழ்நாடு சுகாதார துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் அதிகப்படியாக சென்னையில் நேற்று மட்டும் 57 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மொத்தமாக சென்னையில் 295 பேர் கொரோனா தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். அதனை தொடர்ந்து செங்கல்பட்டில் 22 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இறப்புகள் எதுவுமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு வருவோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார். தற்போது தமிழ்நாட்டில் தினசரி பாதிப்பானது 100-ஐ கடந்துள்ள நிலையில், மருத்துவமனைகளில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் திரையரங்கம், கூட்ட அரங்குகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவசம் கட்டாயம் அணிய பொது சுகாதாரத்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மேலும் பெரும்பாலானோருக்கு இரண்டு தவனை தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் கொரோனாவிற்கு எதிராக மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனால் பாதிப்புகள் குறைவாகவே உள்ளது என்றும் குறிப்பிட்டார்.


தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியாவிலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் 1000த்துக்கும் கீழ் இருந்த தினசரி பாதிப்பு, கடந்த சில நாட்களாக 3000 –த்தை கடந்து தினசரி பாதிப்பு பதிவாகி வருகிறது. இதனால் தினசரி தொற்று பாதிப்பு 2.87 சதவீதமாகவும் வாராந்திர தொற்று பாதிப்பு 2.24 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் தினசரி தொற்று பாதிப்பு சதவீதம் என்பது 2.61 சதவீதமாகவும், வாராந்திர தொற்று பாதிப்பு சதவீதம் 1.91 சதவீதமாகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Twitter Logo: திடீரென மாற்றப்பட்ட ட்விட்டர் லோகோ.. நாய் மீம் (Doge) புகைப்படத்தை வைத்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?


Pakistan Twitter : பாகிஸ்தான் ட்விட்டர் கணக்கிற்கு இந்தியாவில் தடை... 6 மாதங்களில் 2-வது முறையாக நடவடிக்கை...! காரணம் என்ன?