காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கணிசமாக குறைய துவங்கியுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளொன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 200-ஆக இருந்தது. ஊரடங்கும் எதிரொலியாக தற்போது கணிசமாக குறைந்தது. நாளொன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு 100க்கும் கீழ் குறைந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று கொரோனா வைரஸ் தோற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 62 கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே நாளில் உயிரிழந்தவர் எண்ணிக்கை 1, குணமடைந்து ஒரே நாளில் வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 89 . தற்போது காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் 685 .
காஞ்சிபுரம்: இன்று 62 நபர்களுக்கு கொரோனா பாசிட்டிவ்.. ஒருவர் பலி!
கிஷோர் | 03 Jul 2021 08:29 PM (IST)
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று ஒரே நாளில் 62 நபர்கள், ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காஞ்சிபுரம்
Published at: 03 Jul 2021 08:29 PM (IST)