Tamilnadu Corona Update: தமிழ்நாட்டில் இன்று 4013 பேருக்கு கொரோனா; 115 பேர் பலி - முழு விவரம்!

கொரோனாவால் மேலும் 115 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32,933 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 93 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 22 பேரும் உயிரிழந்தனர்.

Continues below advertisement

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று 4 ஆயிரத்து 13 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,60,194 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 4,013 ஆக உள்ளது.

Continues below advertisement

இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24 லட்சத்து 92 ஆயிரத்து 420 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 33 ஆயிரத்து 224 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 227 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 238 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 227 ஆக உள்ளது.

Battleground | பப்ஜி அக்கவுண்ட் டூ பேட்டில்கிரவுண்ட்.. ரெக்க கட்டி பறக்கும் புது கேம்!

கோவை 474, ஈரோடு 360, சேலம் 251, திருப்பூர் 231, தஞ்சாவூர் 232, செங்கல்பட்டு 188, நாமக்கல் 118, திருச்சி 170, திருவள்ளூர் 102, கடலூர் 98, திருவண்ணாமலை 174, கிருஷ்ணகிரி 89, நீலகிரி 77, கள்ளக்குறிச்சி 91, மதுரை 78 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறை, நாகை, ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, வேலூரில் நேற்றைவிட இன்று பாதிப்பு அதிகரித்துள்ளது.


கொரோனாவால் மேலும் 115 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32,933 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 93 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 22 பேரும் உயிரிழந்தனர். சென்னையில் இன்று 20 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் மொத்தம் 8217 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தஞ்சாவூர் 26, சென்னை 20, திண்டுக்கல், ஈரோடு, மதுரையில்  தலா 6 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2 இரண்டு நாட்களில் தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணை நோய்கள் இல்லாத 17 பேர் உயிரிழந்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்கு உட்பட்ட 20 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 35,881 ஆக உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மேலும் 4,724 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 24,23,606 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

12 வயதிற்குட்பட்ட 164 சிறார்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இவர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் குறைந்துள்ளது. இன்று மாநிலம் முழுவதும் 40,046 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 27,079 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும், 6483 ஐசியு படுக்கைகளும் பயன்பாட்டுக்கு தயாராக உள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது. 

பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, தேவையில்லாமல் வெளியில் செல்லாமல்இருப்பது, சமூக இடைவெளியை முறையாக கடைபிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கையாண்டால் கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம். 

Palaniappan Joins DMK : திமுகவில் இணைந்த முன்னாள் அதிமுக அமைச்சர்!

 

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

Continues below advertisement
Sponsored Links by Taboola