உயிர்வாழும் SARS-CoV-2 வைரஸ்:


இறைச்சி பிரியரா நீங்கள். அப்படியென்றால் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் உங்கள் வீட்டில் கூட கொரோனா வைரஸ் இருக்கக்கூடும் என்கிறது ஒரு பகீர் ரிப்போர்ட்.

SARS-CoV-2 வைரஸ் தான் கோவிட் - 19 வைரஸ் பரவ முக்கியமான காரணியாக உள்ளது. இந்த வைரஸ் பற்றின ஒரு பகீர் ரிப்போர்ட் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது இவை சுமார் 30 நாட்கள் வரை குளிர்சாதனப் பெட்டிகளில் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ள மீன் பொருட்கள் அல்லது இறைச்சிகளில் உயிர் வாழக் கூடும் என்பது தான் அந்த அறிக்கை.


இறைச்சிகளில் வைரஸ்:


சமீபத்தில் அப்ளைடு அண்ட் என்விரான்மென்டல் மைக்ரோபயாலஜி இதழில், ஒரு ஆய்வின் தகவல் வெளியிடப்பட்டது. அந்த மருத்துவ ஆய்வில் பன்றி, கோழி, சால்மன் மற்றும் மாட்டிறைச்சி பரிசோதனை செய்யப்பட்டது. இவைகளை குளிர்சாதன பெட்டியிலும்  (4 டிகிரி செல்சியஸ்) மற்றும் ஃபிரீசரிலும்  (மைனஸ் 20 டிகிரி சி) பதப்படுத்தி வைத்துள்ளனர். அதில் SARS-CoV-2 வைரஸ் அல்லாது அதற்கு சமமான தன்மையுடைய வைரஸ் வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் இந்த வைரஸ் கிருமிகள் 30  நாட்கள் பதப்படுத்தப்பட்ட நிலையில் வைத்தும் உயிர்வாழும் என்பதை கண்டறிந்தனர்.


30 நாட்கள் உயிர் வாழும்:


பொதுவாக நாம் மீன் மற்றும் இறைச்சிகளை ஃப்ரிட்ஜில் வைக்காமல் இருந்தாலும் அதை ஃபிரீசரில் பதப்படுத்தும் பழக்கம் கொண்டவர்கள். ஆனால் கோவிட் - 19 வைரஸை உண்டாகக்கூடிய SARS-CoV-2 வைரஸ் 30 நாட்கள் ஃபிரீசரில் பதப்படுத்தப்பட்டாலும் வளர்கின்றன என்பதை கண்டறிந்ததாக தெரிவித்துள்ளார் அமெரிக்காவின் கேம்ப்பெல் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆய்வின் முதல் எழுத்தாளர் எமிலி எஸ். பெய்லி.

தென்கிழக்கு ஆசியாவில் கோவிட்-19 கண்டறியப்பட்டவுடன் அது சமூக பரவலாக ஆவதற்கு முன்னரே ஆய்வை மேற்கொண்டுள்ளனர். அந்த அறிக்கையில் SARS-CoV-2  பரவப்பட்ட இடங்களில் உற்பத்தி செய்யப்பட்டு பேக் செய்யப்பட்ட இறைச்சிகள் இந்த கோவிட் - 19 வைரஸ் பரவலுக்கு ஆதாரமாக இருந்திருக்கலாம் என்கிறார் பெய்லி. மேலும் இது போன்ற வைரஸ்கள் இப்படி பட்ட நிலையிலும் உயிர் வாழ முடியுமா என்பதை பற்றி ஆராய்ச்சி செய்வதையே  எங்களின் குறிக்கோளாக வைத்துள்ளோம் என்றார்.  

SARS-CoV-2 வைரஸ் சுவாச குடல் மட்டுமல்லாமல் குடலிலும் வளரும் வாய்ப்பு உள்ளது என்பதை கவனத்தில் வைத்து கொள்ள வேண்டும் என்றார்.  இந்த ஆய்விற்காக லிப்பிட் உரையோடு உள்ள RNA வைரஸ் மற்றும் இரண்டு கொரோனா வைரஸ்களான murine hepatitis virus transmissible gastroenteritis virus என இவை இரண்டும் மாற்று மருந்துகளாக பயன்படுத்தப்பட்டது என்றார்.  

பதப்படுத்தப்படும் உணவு பொருட்களின் தன்மையை பொறுத்தே அவை மாசுபடுகிறது. உணவுகளை பதப்படுத்தும் முறை, பயன்படுத்தப்பட்ட கத்தி, பாத்திரம் என பல கரங்கள் இருப்பதால் உணவு மாசுபடுவதை தடுக்க போதிய முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்றார்.


Also Read: The Festival Of Coconut Roasting Is Specially Celebrated In Salem..! Read This..! | ஆடி மாசம் வந்தா தேங்காய் சுடணும்.. சேலத்தில் இப்படி ஒரு பண்டிகை..! (abplive.com)