காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸின் தொற்று பரவும் வேகம் சற்று குறைந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பொருத்தவரை கொரோனா வைரஸ் தொற்று பரவல் கட்டுக்குள் இருக்கிறது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நாளொன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 100க்கும் கீழாக குறைந்து வருகிறது.



காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 48. அதில் காஞ்சிபுரம் பகுதியில் ஆறு நபர்கள், குன்றத்தூர் பகுதியில் 16 நபர்களுக்கும், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஒன்பது நபர்களுக்கும், உத்திரமேரூர் பகுதியில் மூன்று நபர்களுக்கும், பிற மாவட்டத்தை சேர்ந்த 14 நபர்களுக்கும் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் இன்று ஒரே நாளில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 58 ஆக உள்ளது. அதேபோல் இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒருநாள் வைரஸ் தொற்றால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை.



மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 51, நேற்று கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் எண்ணிக்கை 3. ஜூலை ஆறாம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 51, உயிரிழந்தவரின் எண்ணிக்கை 1. ஜூலை 5 ஆம் தேதி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 53 உயிரிழந்தவரின் எண்ணிக்கை 1. ஜூலை நான்காம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 58 உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3. ஜூலை 3 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 62 உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 . ஜூலை 2 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 67 உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2. இவ்வாறாக கடந்த ஒரு வார காலமாக கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெகுவாக குறைந்து வருகிறது.




இன்று காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 4780 மாதிரிகளை சோதனை செய்ததில் 51 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70732 சிகிச்சை பெற்று முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியவர் எண்ணிக்கை 69018. தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 524.

 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வைரஸ் தொற்று குறைந்தாலும் பொதுமக்கள் சமூக பொறுப்புடன் முகக் கவசம் அணிதல் சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்டவற்றை பின்பற்றினால் மட்டுமே வைரஸ் தொற்றில் இருந்து முழுமையாக விடுபட முடியும் என்பதே மருத்துவர்களின் கருத்தாக உள்ளது.