Cold Snowfall: மலைகளில் பனி பொழிந்தால்..! நகரங்களில் குளிர் அதிகரிப்பது ஏன்? காரணம் தெரியுமா?

Cold Snowfall: மலைகளில் பனி பொழிந்தால், நகரங்களில் குளிர் அதிகரிப்பது ஏன்? என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

Continues below advertisement

Cold Snowfall: மலைகளில் பனி பொழிந்தால், நகரங்களில் குளிர் அதிகரிப்பதற்கான அறிவியல்பூர்வமான காரணம் கிழே விவரிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

பனிப்பொழிவும்.. குளிரும்..!

மலைகளில் பனிப்பொழிவு தொடங்கிவிட்டது, அதாவது குளிர் அதிகரிக்கப் போகிறது என்று பேசுவதை நீங்க கேள்விப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. இதில் சிந்திக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் ஏற்படும் பனிப்பொழிவு டெல்லி போன்ற சமவெளிகளை எவ்வாறு பாதிக்கிறது? அதாவது, இமயமலைப் பகுதிகளில் பனி பெய்தால், அதன் தாக்கம் டெல்லி, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ஹரியானா போன்ற சமவெளிப் பகுதிகளுக்கு ஏன் பரவுகிறது? இதற்குப் பின்னால் உள்ள அறிவியல் என்ன? 

காற்றின் பங்களிப்பு..!

இமயமலை போன்ற மலைப்பாங்கான பகுதிகளில் இருந்து சமவெளிகளுக்கு குளிர்ச்சியை வழங்குவதில் காற்று பெரும் பங்கு வகிக்கிறது. இந்தியாவின் வடபகுதியில் உள்ள இமயமலை சீனா மற்றும் ரஷ்யாவில் இருந்து வரும் குளிர்ந்த காற்றை நிறுத்துகிறது. ஆனால் அதனால் மேற்கில் இருந்து வரும் காற்றை நிறுத்த முடியவில்லை. இந்த காற்று அரேபிய கடல் வழியாக இல்லாமல் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் வழியாக இந்தியாவை அடைகிறது. இதன் காரணமாக வட இந்தியாவில் அவற்றின் தாக்கம் அதிகமாக தெரியும்.

மத்தியதரைக் கடலில் இருந்து வரும் இந்தக் காற்று இந்தியாவின் சமவெளியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த காற்று ஈரப்பதத்தை கொண்டு செல்கிறது, அதன் விளைவு இமயமலையிலிருந்து இந்தியாவின் சமவெளி வரை பரவுகிறது. இந்த காற்று சமவெளிகளில் மழையை ஏற்படுத்துகிறது. அதேநேரம்,  இமயமலையில் பனிப்பொழிவை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக அங்கு வெப்பநிலை கணிசமாக குறைகிறது.  

காற்று வீசுவதற்கான விதிகள்:

காற்று வீசுவதற்கு ஒரு விதி உள்ளது. அதன்படி பூமியின் ஒரு பகுதி வெப்பமடைந்தால் அந்த இடத்தை நோக்கி குளிர்ந்த காற்று பயணிக்க தொடங்குகிறது. உண்மையில், சூடான காற்று குளிர் காற்றை விட இலகுவானது. எனவே, சூடான காற்று எப்போதும் மேல்நோக்கி எழுந்து பரவுகிறது. இந்த காற்று ஒரு இடத்தை விட்டு வெளியேறும்போது ஏற்படும் வெற்றிடத்தை நிரப்ப, ​​குளிர்ந்த காற்று அந்த இடத்தை நோக்கி பயணிக்கும்.  இதனால், டிசம்பர் மாதம் தொடங்கியவுடன் சமவெளிப் பகுதிகள் குளிரால் பாதிக்கப்படத் தொடங்கும். உண்மையில், மலைகளில் பனிப்பொழிவு தொடங்கிய பிறகு, அங்கு வெப்பநிலை கணிசமாகக் குறைகிறது, இதன் காரணமாக காற்று மிகவும் குளிராகவும் அடர்த்தியாகவும் மாறி வெப்பமான சமவெளிகளை நோக்கி வீசத் தொடங்குகிறது. 

ஓரிரு நாட்களில் காற்றின் தாக்கம்:

இமயமலை போன்ற மலைப்பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்பட்டதாக வைத்துக் கொள்வோம், அதன் தாக்கம் உடனடியாக சமவெளிப் பகுதிகளில் தோன்றத் தொடங்குமா? என்றால் அதற்கான பதில் இல்லை என்பதே உண்மை. குளிர்ந்த காற்று வெப்பமான சமவெளிகளை அடைய ஒன்று முதல் இரண்டு நாட்கள் ஆகும், அதன் பிறகு சமவெளிகளில் குளிரை உணரலாம்.

Continues below advertisement
Sponsored Links by Taboola