Fact Check: ஆத்தி..! போதைப்பொருள் & ராகிங் குற்றங்களுக்கு மரண தண்டனையா? அமித் ஷா சொன்னதாக பரவும் தகவல்
Fact Check: ஆத்தி..! போதைப்பொருள் & ராகிங் குற்றங்களுக்கு மரண தண்டனையா? அமித் ஷா சொன்னதாக பரவும் தகவல்
குலசேகரன் முனிரத்தினம் Updated at:
11 Mar 2025 12:35 PM (IST)
Fact Check: போதைப்பொருள் மற்றும் ராகிங் வழக்குகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என, உள்துறை அமைச்சர் அமித் ஷா சொன்னதாக ஒரு தகவல் இணையத்தில் வைரலாகியுள்ளது.
Fact Check: போதைப்பொருள் மற்றும் ராகிங் வழக்குகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என, உள்துறை அமைச்சர் அமித் ஷா சொன்னதாக பரவும் தகவலின் உண்மைத்தன்மை கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
வைரலாகும் செய்தி
நாட்டில் இனி போதைப்பொருள் வழக்குகள், ராகிங் மற்றும் கொலை வழக்குகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாக ஒரு சமூக வலைதள செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் புகைப்படம்
உண்மைத்தன்மை என்ன?
அந்த செய்தியை ஆராய்ந்தபோது அது அடிப்படையற்றது என்றும், திருத்தப்பட்ட செய்தி அட்டை பரப்பப்படுவதாகவும் தெரியவந்தது.வைரலாகி வந்த நியூஸ் கார்டின் உள்ளடக்கங்களை ஆராய்ந்தபோது, மேலே உள்ள கோடுகள் போலியாக வரையப்பட்டிருக்கலாம் என்று கண்டறியப்பட்டது. அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள செய்தி நிறுவனத்தின் நியூஸ்கார்டில் வழக்கமாக பயன்படுத்தப்படும சின்டெக்ஸ் மற்றும் எழுத்துரு, தற்போது வைரலாகி வரும் கார்டில் மாறுபட்டு இருப்பது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், மார்ச் 2, 2025 அன்று ஜனம்டிவி ஃபேஸ்புக் தளத்தில் வெளியான கார்டை, சிலர் தவறாக திருத்தி வெளியிட்டு இருப்பது தெரியவந்தது.
உண்மையான நியூஸ் கார்ட்
அமித் ஷா உண்மையில் சொன்னது என்ன?
போதைப்பொருள் மாஃபியாவிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்குவதே அரசின் இலக்கு என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதை அடிப்படையாகக் கொண்டு உண்மையான நியூஸ் கார்ட் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மரண தண்டனை குறித்து பரவி வரும் அட்டையின் மேல் பகுதியில் எழுதப்பட்ட வரிகள் போலியானவை என்பது தெளிவாகியது.
உண்மையான மற்றும் போலியான செய்தியின் ஒப்பீடு
தொடர்ந்து செய்தி தொடர்பான விரிவான செய்திகளும் சரிபார்க்கப்பட்டன. ஜனம் டிவி யூடியூப் சேனலில் வழங்கப்பட்ட செய்திகளில் விவரங்கள் உள்ளன . இந்தச் செய்தி அமித் ஷா X இல் பகிர்ந்த பதிவை அடிப்படையாகக் கொண்டது.
யூடியூபில் வெளியான செய்தி
அமித் ஷா போட்ட ட்வீட்:
அமித் ஷாவின் ட்விட்டர் பதிவு
அந்த ட்வீட் அமித் ஷாவின் அசல் அறிக்கை போதைப்பொருள் தொடர்பானது மட்டுமே என்பதை மேலும் தெளிவாக்கியது. இது ராகிங் அல்லது கொலை பற்றிப் பேசவில்லை. அது மட்டுமல்லாமல், போதைப்பொருள் மாஃபியாக்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மரண தண்டனை பற்றிய எந்தக் குறிப்பும் காணப்படவில்லை.
நாட்டில் பல்வேறு வழக்குகளில் நடத்தப்பட்ட விசாரணைகளில் 29 போதைப்பொருள் கும்பல்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற கடுமையான நடவடிக்கை தொடரும் என்றும் அவர் அந்தக் குறிப்பில் குறிப்பிடுகிறார். இதன் மூலம், பரப்பப்படும் அட்டை போலியானது என்பதும், அமித் ஷா மரண தண்டனை பற்றி எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என்பதும் தெளிவாகிறது.
முடிவுரை:
போதைப்பொருள், ராகிங் மற்றும் கொலை வழக்குகளில் மரண தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாக பரவும் நியூஸ் கார்ட் தவறாக திருத்தப்பட்டுள்ளது. உண்மையில், அமித் ஷாவின் அறிக்கையில் மரண தண்டனை பற்றி குறிப்பிடப்படவில்லை என்றும், போதைப்பொருள் மாஃபியாவை கட்டுப்படுத்துவேன் என்று மட்டுமே அவர் கூறியதும் ஆய்வில் உறுதியாகியுள்ளது.
பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக Newsmeter என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை மொழி பெயர்த்து எழுதியுள்ளது.