தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன்.


இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் மகா சீதாவை டார்ச்சர் செய்யத் தொடங்கிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.


அதாவது, செல்வி, சீதாவிடம் இதையெல்லாம் ராம் சார் கிட்ட சொல்லிடலாம் என்று ஐடியா கொடுத்துவிட்டு வெளியே வர மகா மற்றும் அர்ச்சனா இதை கேட்டு விடுகின்றனர். இனிமே நீ சமைக்க கூடாது சீதா தான் சமைக்கணும், அப்படி செய்யலன்னா இன்னும் சம்பளத்துல பிடிச்சு வச்சிருக்க பணம் உனக்கு கிடைக்காது என அதிர்ச்சி கொடுக்கின்றனர்.


சீதா சமைக்கிறது எனக்கு பிடிக்கிற விஷயம் தானே நான் பாத்துக்குறேன் என்று சொல்லி சமைத்து முடிக்க செல்வி பரிமாற போகும்போது தடுத்து நிறுத்தும் மகா, சீதா தான் பரிமாறனும் இல்லனா உனக்கு வேலையும் கிடையாது உன் பணமும் கிடையாது என சொல்ல சீதா செல்விக்காக பரிமாறுகிறாள்.


அது மட்டுமல்லாமல் மதியத்துக்கு ஆபீஸ்க்கு சாப்பாடு கொண்டு வா என்று சொல்ல சீதாவும் டிஃபன் கரியரை தூக்கிக்கொண்டு சாப்பாடு எடுத்து போக மகா அவளை நான் சொல்லும் வரை காத்திருக்க சொல் என வெளியேவே நிற்க வைக்கிறாள். பிறகு அவளே கேரியரை தூக்கிட்டு மேலே வரணும் என்று சொல்ல மகாவின் திட்டத்தை புரிந்து கொண்ட சீதா நானும் வரமாட்டேன் என்னுடைய கேரியரும் வராது என சேர் போட்டு உட்கார்ந்து ஷாக் கொடுக்கிறாள். மகா துரையை அனுப்ப சீதா அப்போதும் வர முடியாது என மறுப்பு தெரிவிக்கிறாள்.






இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். 


மேலும் படிக்க 


CM MK Stalin: ”முதலீட்டாளர்களின் முதல் தேர்வு தமிழ்நாடு” - காலணி தொழிற்சாலை திறப்பு விழாவில் முதல்வர் பெருமிதம்


CM MK Stalin: ”முதலீட்டாளர்களின் முதல் தேர்வு தமிழ்நாடு” - காலணி தொழிற்சாலை திறப்பு விழாவில் முதல்வர் பெருமிதம்


IND Vs AUS 3rd T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? ஆஸ்திரேலியா உடன் இன்று 3வது டி20 போட்டி