மரகத நாணயம் படத்தில் இடம் பெற்ற  “நீ கவிதைகளா” பாடலை கேட்டு உருகாதவர்கள் இருக்க முடியுமா என்ன..?  ஜிகேபி வரிகளில், திபு நினன் தாமஸ் இசையில் பிரதீப் குமாரின் காந்த குரலில் வெளியான இந்தப்பாடல் இன்றும் இளைஞர்களின் இதயங்களை தாலாட்டிக்கொண்டிருக்கிறது. இந்தப்பாடலை பற்றி தற்போது அந்த படத்தில் நடித்த நடிகர் ஆதி இந்தியா கிளிட்ஸூக்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.


அதில் அவர் பேசும் போது,  “ அந்த பாட்டு எனக்கு ரொம்பவும் ஃபேவரைட்டான சாங். அந்தப்பாட்டு படத்துல இல்லன்னு சொன்னப்ப நான் அப்செட் ஆயிட்டேன்  உடனே நாங்க எல்லாரும் இந்தப் பாட்டை ஏன் படத்துல வைக்கலன்ணு டைரக்ட்டர்ட்ட கேட்டோம். ஆனா அதுக்கு அவர் பாட்டு கதையை  விட்டு வெளியே போகுது. அதனால ஆடியோவா வைச்சுக்கலாம். ஆனா படத்துல வேணாம்ன்ணு சொல்லிட்டாரு. படத்திலுமே அதை பின்னணி இசை மாதிரிதான் யூஸ் பண்ணிருப்பாங்க.. படம் வெளியாகி 4 வருஷம் போது.. ஆனா இப்பவும் அந்த பாட்டு ட்ரெண்டிங்கில் இருக்குது. அதுக்கு காரணம் அந்தப்பாட்டுல அவ்வளவு ஆத்மா இருக்கு.” என்று பேசியிருக்கிறார். 


 



இந்தப்படத்தில் ஆதியின் ஜோடியாக நிக்கி கல்ராணிக்கும் அவருக்கும் தற்போது நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. இதுதொடர்பான புகைப்படங்களை நிக்கிகல்ராணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். 


நடிகர் ஆதியும், நிக்கி கல்ராணியும் நீண்ட நாட்களாக ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தனர். இந்த நிலையில் இன்று இருவருக்கும் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.


 






நிக்கி கல்ராணியும், ஆதியும் முன்னதாக, மல்பு, யாகராவாயினும் நாகாக்க, மரகரத நாணயம் உள்ளிட்ட படங்களில் ஒன்றாக இணைந்து நடித்திருந்தனர். இந்த  படங்களில் ஒன்றாக நடித்ததின் மூலம் ஆதியுடன் நெருங்கி பழகிய நிக்கி கல்ராணி, அண்மையில் ஆதி அப்பாவின்  பிறந்தநாள் பார்டியிலும் பங்கேற்றுள்ளாராம்.  


 






ஆதி நடிப்பில் ஓடிடியில் வெளியான கிளாப் திரைப்படம் நல்லவரவேற்பை பெற்றுள்ளது. ஆதி அடுத்ததாக லிங்குசாமி இயக்கத்தில், ராம் பொத்தேனியின் தி வாரியர் படத்தில் நடிக்க இருக்கிறார்.