''தமிழ் சினிமாவில் டாப் மியூசிக் டைரக்டர்ஸ் லிஸ்ட்டில் இருப்பவர் யுவன் ஷங்கர் ராஜா. இவருடைய பாடல்கள் இன்றைய தலைமுறையினருக்கு கஷ்டத்திலும், மகிழ்ச்சியிலும் ஃபேவரைட். தற்போது அஜித்தின் 'வலிமை' படத்தின் கம்போஸிங் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் யுவன். இந்நிலையில் இவர் ட்விட்டரில் பதிவு செய்யும் போஸ்ட்டுகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பாக யுவன் ட்விட்டரில் ”அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர். அல்லாஹ்வும் அவர்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன்” என்ற குர்-ஆன் வசனம் ஒன்றை பதிவு செய்திருந்தார். இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் சிலர் தங்களுடைய பதில்களை கோபமாக பதிவிட்டிருந்தனர்.
''யுவனின் திருமணமே காதல் திருமணம் கிடையாது. எப்போவும் அம்மாவின் செல்லப் பிள்ளையான யுவன், அம்மாவின் மறைவுக்கு பிறகு துயரத்தில் இருந்து மீள கஷ்டப்பட்டார். அப்போது, ”உடலிருந்து உயிர் பிரிஞ்சதுக்கு பிறகு எங்கே போகுதுன்னு” என்கிற கேள்வி யுவன் கிட்ட எழுந்திருக்க, இதுக்கு பதில் கிடைக்காமல் தனிமையில் இருந்த நேரத்துல யுவனின் நண்பர் ஒருவர் உம்ரா செய்து விட்டு யுவனை சந்தித்து இருக்கிறார். அப்போது, யுவனுக்கு பரிசாக குர்-ஆனை கொடுத்திருக்கிறார். எப்போதும் டிராவலிங் நேரத்தில் புத்தகம் படிப்பதை வழக்கமாக வைத்திருக்கும் யுவன் குரானை படிக்க தொடங்கியிருக்கிறார். அப்போது இஸ்லாம் பிடித்துப்போகவே ஆறு மாதம் வரைக்கும் இஸ்லாம் தொடர்பாக தன்னுடைய லைஃப் ஸ்டைலில் பிராக்டீஸ் செய்திருக்கிறார் யுவன். இதற்கு பின்பே இவருடைய மனைவி ஜப்ரூன் நிஷாவை (zafroon nisa) பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் முடித்திருக்கிறார் யுவன். முதலில் யுவன் இஸ்லாம் மதத்துக்கு மாறியது குறித்து கவலை அடைந்த இளையராஜா பின்பு சரியாகிவிட்டார்” என்றனர். குறிப்பாக, இஸ்லாம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் மற்றும் ஆடியோவை கேட்பதில் நேரம் செலவழிக்கும் யுவன் தற்போது ரமலான் மாதம் என்பதால் நோன்பு வைத்திருக்கிறாராம். லாக்டவுன் காரணமாக பள்ளிவாசல்கள் எல்லாமே மூடியிருக்கும் நிலையில் தன்னுடைய மியூசிக் அலுவலகத்தில் இதுகான தனியறையை ஒதுக்கியிருக்கிறாராம்''