ஷெனாஸ் கில், இவரது அறிமுகப் படம் பாலிவுட்டில் வெளியாவதற்கு முன்னரே இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் நிரம்பி வழிகிறது. கபி ஈத் கபி தீவாளி என்ற படத்தில் சல்மான் கானுடன் ஜோடி போட்டு அறிமுகமாகிறார் ஷெனாஸ் கில். இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.


இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் இவருக்கு ரசிகர் ஒருவர் அன்புத் தொல்லை தர அதை இவர் கையாண்ட விதம் கொண்டாடப்படுகிறது. திரைக்கு வரும் முன்னரே ரசிகர்களின் அபிமானத்தைப் பெறுவது எல்லாம் ஒரு வரம். இந்த அன்பினாலேயே ஷெனாஸ் பாலிவுட்டில் ஒரு ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஷெனாஸ் எப்போதுமே அவரது வெளிப்படைத் தன்மையாலும், துருதுரு துடிப்பான துள்ளலான இயல்பாலும் அறியப்படுகிறார்.


நடந்தது என்ன?
அண்மையில் மும்பையில் நடந்த ஷோ பிஸ் நிகழ்ச்சி ஒன்றில் ஷெனாஸ் கில் கலந்து கொண்டார். அப்போது அவர் மேடையில் இருந்து இறங்கும் போது ரசிகை ஒருவர் அவரைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் சிந்தியபடியே அவரை கட்டியணைத்து கொண்டார். இதனால் ஷெனாஸின் மெய்க்காப்பாளர்கள் கொஞ்சம் அதிர்ந்து போயினர். சற்றும் எதிர்பாராமல் இந்தச் செயல் நடந்துவிட்டது.


ஆனாலும் ஷெனாஸ் பதற்றமாகவில்லை. அவர் தனது மெய்க்காப்பாளர்களை ஆசுவாசப்படுத்தினார். ரசிகையை தன்னிடமிருந்து வலுக்கட்டாயமாக பிரிக்க வேண்டாம் என்று கூறினார். பின்னர் அந்த ரசிகை இயல்புக்குத் திரும்ப அவருக்கு நன்றி சொல்லி விடை பெற்றார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. அவரை மிகவும் எளிமையான பாந்தமான நடிகை என்று ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.


இன்ஸ்டாகிராமில் வைரலான மயில் நடனம்:
ஷெனாஸ் கில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கிறார். அண்மையில் அவர் ஆண் மயில் தோகை விரித்தாட அதன் பின்னால் அழகிய நடனமாடிய காட்சி இணையத்தில் வைரலானது. அழகும் அன்பும் ஒரு சேர நிறைந்த ஷெனாஸ் கில் என்று அவர் பாலிவுட் உலகில் கொண்டாடப்படுகிறார்.