விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து பிரபலமான ரக்‌ஷன் தற்போது நடிகராக அறிமுகமாகியுள்ளார்.  

  


இயக்குநர் இரா கோ யோகேந்திரன் இயக்கத்தில், பிலியா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் குவியம் மீடியா ஒர்க்ஸ் இணைந்து தயாரிக்க உள்ள படத்தில் விஜய்டிவி புகழ் ரக்‌ஷன் நடிகராக அறிமுகமாக உள்ளார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. 


 






முன்னதாக ரக்‌ஷன் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான, “கண்ணும் கண்ணும் கொள்ளைடித்தால்” படத்தில் அவரின் நண்பனாக நடித்திருந்தார். இந்தப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது நாயகனாகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கிறது. காதல், நட்பு மற்றும் உறவுகளை மையமாக வைத்து, ஒரு கமர்ஷியல் படமாக இந்தப்படம் உருவாக இருக்கிறதாம்.




ரக்‌ஷன் மட்டுமல்லாது கலக்கபோவது யாரு தீனா, விஷாகா திமான், பிராங்க்ஸ்டர் ராகுல், மற்றும் பலர் நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு, மலையாளத்தின் பிரபல இசையமைப்பாளர் சச்சின் வாரியர் இசையமைக்கிறார். பிரபல பாடலாசிரியரான தாமரை படத்திற்கு பாடல் வரிகளை எழுதுகிறார்.


கோபி துரைசாமி ஒளிப்பதிவாளராக பணியாற்றும் இந்தப்படத்திற்கு  ‘அர்ஜூன் ரெட்டி’ படப்புகழ் செஷாங் மாலி படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பை, கன்னியாகுமரி மாவட்டத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட்லுக், டீசர் குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண