பிரபல நடிகையும், விஜேவுமான மகாலட்சுமியை தயாரிப்பாளர் ரவியை திருமணம் செய்துள்ள சம்பவம் கோலிவுட்டின் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. 




2000 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி ரசிகர்களிடத்தின் நன்கு பிரபலமானவர் மகாலட்சுமி. ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற இவர், நிறைய நிகழ்ச்சிகளில் பணிபுரியத் தொடங்கி நிலையில் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். ராதிகா நடிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி சீரியல் மூலம் மகாலட்சுமியின் சின்னத்திரை பயணத்தில் மிக முக்கியமானதாக அமைந்தது. தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு செல்லமே, முந்தானை முடிச்சி, இரு மலர்கள், அவள் என பல சீரியல்களில் அவர் நடித்திருந்தார்.


 






இதனிடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மகாலட்சுமிக்கு அனில் என்பவருடன் ஏற்கனவே திருமணம் நடைபெற்று இருவரும் விவாகரத்துக்காக விண்ணப்பித்திருந்தனர். அப்போது மகாலட்சுமி மீது பிரபல சீரியல் நடிகை ஜெய் ஸ்ரீ கடுமையான குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார். அதில் தன் கணவரும், நடிகருமான ஈஸ்வருக்கும், மகாலட்சுமிக்கும் இடையே தொடர்பு இருப்பதாக தெரிவித்தார். இதனை மறுத்த மகாலட்சுமி ஜெய்ஸ்ரீயும், அனிலும் இணைந்து தனக்கு பிரச்சனை உருவாக்குவதாக விளக்கமளித்தார். 


இந்நிலையில் மகாலட்சுமி பிரபல தயாரிப்பாளர் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் ரவிந்திரன் சந்திரசேகரை திருமணம் செய்துள்ளார்.


கடந்த சில வருடங்களாகவே நடிகை மகாலட்சுமியும் முருங்கைக்காய் சிப்ஸ், சுட்ட கதை போன்ற திரைப்படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளரான ரவிச்சந்திரனும் காதலித்து வந்துள்ளனர் இதை ஒரு பிரபல சேனலின் நேர்காணலின்போது ரவிச்சந்திரனிடம் கேட்டபோது அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று சமாளித்தார்.


 இவர்கள் இருவரும் காதலித்தது அவர்களது நெருங்கிய வட்டாரத்தில் மட்டுமே தெரிந்திருந்தது, ஆனால் தற்போது அந்த காதல் திருமணத்தில் முடிந்துள்ளது.


 






இதை தொடர்ந்து இருவருமே தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கல்யாண புகைப்படங்கள் அனைத்தையும் பதிவிட்டு வருகின்றனர் தற்போது அனைத்தும் வைரலாகி வருகிறது. இருவரை பற்றி இருவருமே அன்பைப் பொழியும் வண்ணம் புகைப்படங்களை பதிவிட்டு வருவதால் கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாக இவர்களது திருமணம் அமைந்துள்ளது.