தனது கண்ணீர் அஞ்சலி போஸ்டரை பார்த்து தானே சிரிக்கும் பாக்கியம் கொண்டவர்களில் நானும் ஒருத்தி என்று கூறியுள்ளார் நடிகையும் அ.தி.மு.க துணை கொள்கை பரப்பு செயலாளருமான விந்தியா. சங்கமம் பட மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தாலும், அவர் நடித்த பல படங்கள் சரியாக ஹிட் ஆகாத நிலையில் திருமணம் செய்து கொண்டார் . குடும்ப வாழ்க்கையில் பிளவு ஏற்பட்டு, தனது அரசியல் பணியில் கவனம் செலுத்தினார் . 2011ம் ஆண்டு அ.தி.மு.கவில் இணைந்தார் . நட்சத்திர பேச்சாளராக இருந்து தற்பொழுது துணை கொள்கைபரப்பு செயலாளராக இருக்கிறார் . இந்நிலையில் அவர் பற்றி ஏதாவது விமர்சனங்கள் வருது உண்டு.


 


<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">உலகத்துலயே தன்னோட கண்ணீர் அஞ்சலி போஸ்டர பாத்து தானே சிரிக்குற பாக்கியம் கிடைச்சவங்கள்ல நானும் ஒருத்தி. ஸ்டாலினுக்கு வருங்கால முதல்வரேனு போஸ்டர் போட்டு அலுத்து போயிட்டாங்க போல. இந்தமாறி போஸ்டர் பார்த்தா ஆயுசு கூடுமாம். ஆண்டவனை தவிர எனக்கு என்ட் கார்டு போட எவனாலயும் முடியாது ராசா. <a >pic.twitter.com/Zsie6obR86</a></p>&mdash; Vindhyaa (@vindhyaAiadmk) <a >April 27, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>


தற்பொழுது யாரோ அவருக்கு இறுதி அஞ்சலி போஸ்டர் அடித்து சமூக வலைத்தளத்தில் பரவவிட்டு இருக்கிறார்கள். இதனை பார்த்து " உலகத்துலயே தன்னோட கண்ணீர் அஞ்சலி போஸ்டர பாத்து, தானே சிரிக்குற பாக்கியம் கிடைச்சவங்கள்ல நானும் ஒருத்தி. ஸ்டாலினுக்கு வருங்கால முதல்வரேனு போஸ்டர் போட்டு அலுத்து போயிட்டாங்க போல; இந்த மாதிரி  போஸ்டர் பார்த்தா ஆயுசு கூடுமாம். ஆண்டவனை தவிர எனக்கு எண்ட் கார்டு போட எவனாலயும் முடியாது ராசா." என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார் விந்தியா.