தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. 


விஜய் நடிப்பில் தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம்  ‘வாரிசு’. தமிழில் 'வாரிசு' என்ற பெயரிலும் தெலுங்கில் 'வாரசுடு' என்ற பெயரிலும் இந்தத்திரைப்படம் வெளியாக உள்ளது.


இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம், சங்கீதா, ஜெயசுதா, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளது.


குடும்பக் கதையாகி உருவாகி வரும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தெலுங்கின் மிகப்பெரிய தயாரிப்பாளரான தில் ராஜூ தயாரிக்கிறார். 






தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளும் வெளிவர இருக்கும் இந்த திரைப்படம்  தீபாவளிக்கு வெளியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டு, பின்னர் படப்பிடிப்பு முடியாத காரணத்தால் பொங்கல் ரிலீஸ் என தள்ளி வைக்கப்பட்டது. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.






இதுவரை வாரிசு படத்தின் மூன்று போஸ்டர்கள் வெளியாகி, மக்களிடம் வரவேற்பைப் பெற்றநிலையில், தீபாவளியான இன்று தனது படத்தின் 4வது போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் நடிகர் விஜய் கருப்பு சட்டை அணிந்து எதிரிகளை பந்தாடுவது போல போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. 






ஏற்கனவே, பொங்கலுக்கு ’வாரிசு’ படம் துணிவு படத்துடன் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தீபாவளியன்று படத்தின் போஸ்டர் வெளியாகி இருப்பது விஜய் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.