சமீபத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெரும் வெற்றி பெற்றது. அதேசமயம் யாரும் எதிர்பார்க்காத வகையில் விஜய் மக்கள் இயக்கமும் குறிப்பிடத்தகுந்த இடங்களில் வெற்றி பெற்றது. மொத்தம் 169 இடங்களில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் 129 இடங்களில் வென்றனர்.


சீமானின் நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றி பெறாத சூழலில் விஜய் மக்கள் இயக்கத்தினரின் இந்த வெற்றி அவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 


தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் நடிகர் விஜயை சந்திப்பதற்காக பனையூரில் இருக்கும் அவரது இல்லத்துக்கு சமீபத்தில் சென்றனர். அப்போது அவர்களை சந்தித்த விஜய் அவர்களுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.


 






இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மத்திய, மாநில அரசுகளிடம் கேட்டு நிறைவேற்றித் தர வேண்டும் என்றும், இயக்கத்தில் யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று விஜய் கூறியதாக தெரிவித்தார்.


இந்நிலையில் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஊரக  உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்திற்கு வாக்களித்த தமிழ்நாடு மக்களுக்கு விஜய் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை பணிவோடு தெரிவித்துக்கொள்கிறேன்.




வெற்றி வாகை சூடிய மக்கள் இயக்கத்தை சேர்ந்த 129 மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் விஜயை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இவர்கள் அனைவரும் தமிழ்நாடு மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க மத்திய, மாநில மரசுகளின் கவனத்திற்கு கொண்டு சென்று அதனை தீர்க்கும் நல்வாழ்வு பணியினை விஜய் உத்தரவுப்படி செவ்வனே செயல்படுத்தி மக்கள் பணிகளை தொடர்வார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறே” என குறிப்பிட்டுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: ABP Nadu Exclusive: மக்கள் நீதி மய்யம் To விஜய் மக்கள் இயக்கம்...? பழ.கருப்பையா பளிச் பேட்டி!