பிரபல பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் நேற்று இரவு கொல்கத்தாவில் ஒரு நிகழ்ச்சி ஒன்றி பங்கேற்று இருந்தார். அதன்பின்னர் அவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சூழலில் அவர் கடைசியாக பங்கேற்ற நிகழ்ச்சியிலிருந்து வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் அவர் அந்த அரங்கத்தில் ”ஏசி சரியாக ஓடவில்லை, ரொம்ப வியர்க்குது, கஷ்டமா இருக்கு” என்பது தொடர்பாக பேசியுள்ளார். இந்த வீடியோவை ரசிகர் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 


இந்த வீடியோவை கே.கே.வின் கடைசி வீடியோ என்று பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வீடியோவில் அவருக்கு அதிகமாக வியர்வை ஏற்படும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் அவர் ஏன் இங்கு ஏசி ஓடவில்லை என்று கேள்வி எழுப்பும் காட்சியும் பதிவாகியுள்ளது. 






முன்னதாக பாடகர் கே.கே.வின் மரணம் தொடர்பாக கொல்கத்தா காவல்துறையினர் சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவருடைய உடல் பிரதே பரிசோதனை இன்று நடைபெற்ற பின்னர் முழு விவரம் தெரியவரும் என்று கூறப்படுகிறது. 


இவருடைய மரணம் தொடர்பாக பிரதமர் மோடி, துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு,உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் இரங்கலை பதிவிட்டுள்ளனர். மேலும் பாலிவுட் பாடகர்கள் மற்றும் ரசிகர்களும் தங்களுடைய அஞ்சலியை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். அவருடைய திடீர் மரணம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க: அதிர்ச்சி.. பாடகர் கே.கே மரணத்தில் சந்தேகமா? காவல்துறை எஃப்.ஐ.ஆர் சொல்வது என்ன? போஸ்ட்மார்டம் எப்போது?




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண