தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை  வசந்தி கிருஷ்ணன். தெலுங்கு திரையுலகில் நுழைவதற்கு முன்னர் கன்னட சினிமா மூலம் அறிமுகமான வசந்தி கிருஷ்ணன், தெலுங்கு பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டதற்கு பிறகு மிகவும் பிரபலமானார். கடந்த டிசம்பர் மாதம் தன்னுடைய நீண்ட நாள் காதலரான பவன் கல்யாணுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டது. அவர்களின் திருமண தேதி குறித்த அறிவிப்பு இதுவரையில் வெளியாகவில்லை. 


 




இந்நிலையில் வசந்தி கிருஷ்ணன் மற்றும் பவன் கல்யாண் இருவரும் காதலர் தினத்தை முன்னிட்டு கடந்த வாரம் நடைபெற்ற காதலர் தின நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில் அவர்கள் செய்த செயல் ஒன்று ட்விஸ்டுடன் பல சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனால் ஊடகங்களின் கன்டென்டை மதிப்பிடுவது பற்றி பெரும் கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது.  


இந்த நிகழ்ச்சியில் நடிகை வசந்தி கிருஷ்ணன் மற்றும் பவன் கல்யாண் இருவரும் ஒருவருக்கொருவர் திராட்சை பழத்தை ஊட்டி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. ஒரு கட்டத்தில் அது தீவிரமான போட்டியாக மாறி வசந்தி கிருஷ்ணனுக்கு பவன் கல்யாண் திராட்சைப்பழத்தை வலுக்கட்டாயமாக ஊட்டுவதை காட்டும் கிளிப் ஒன்று இடம்பெற்றது. கண்ணியத்தின் எல்லையை மீறிய இந்த வீடியோ கிளிப்பிங் பார்த்த பார்வையாளர்கள் விமர்சனங்களையும் கண்டங்களையும் முன்வைத்தனர். காதலர்கள் அல்லது தம்பதிகள் யாராக இருந்தாலும் இந்த செயல் மோசமானது, கண்டிக்க வேண்டியது. 






ஒரு பொது மேடையில் நிகழ்ந்த இந்த செயல் ஊடகங்களின் சித்தரிப்பு குறித்த கேள்வியை எழுப்பியது. எண்டர்டெயின்மெண்ட் என்ற போர்வையில் இந்த செயலை தொகுப்பாளர் ஊக்குவிப்பது மேலும் விமர்சனங்களை பெற்றது. சேனலுக்கு அதிக வியூஸ் கிடைக்க வேண்டும் என்பதற்காக இப்படி பட்ட தந்திரங்களை பயன்படுத்துவது கீழ்த்தரமானது என விமர்சிக்கப்பட்டது. 


 




யூடியூப் சேனலின் இந்த செயலுக்கு நெட்டிசன்கள் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த நேர்காணல் கிளிப்பிங் வைரலானதால் சமூக ஊடகங்களின் பிரச்சினை மேலும் அதிகரித்தது. கன்டென்ட் எடுப்பதில் கொஞ்சம் கண்ணியம் இருக்க வேண்டும் என நெட்டிசன்கள் கொந்தளித்தனர். இது பார்வையாளர்கள் மத்தியில் எதிர்மறை விமர்சனங்களை பெற்றதுடன் ஊடக தணிக்கையின் பங்கு மற்றும் பொழுதுபோக்கின் நெறிமுறை எல்லைகள் பற்றிய முக்கியமான கேள்விகளையும் எழுப்பியுள்ளது. 


அன்பின் கொண்டாட்டமாக ஆரம்பித்த இந்த நிகழ்ச்சி வரைமுறையை மீறியதால் சங்கடமான ஒரு நிகழ்ச்சியாக முடிந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சோசியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை வசந்தி கிருஷ்ணன் மற்றும் பவன் கல்யாணுக்கு எதிர்ப்புகள் அதிகரித்து வருகின்றன.