சூர்யா வாங்கிய ஜெட் :


நடிகர், தயாரிப்பாளர், சமூக ஆர்வலர் என பன்முகம் கொண்ட நடிகர் சூர்யா தற்போது பிரைவேட் ஜெட் ஒன்றை தனக்கு சொந்தமாக்கியுள்ளார். Dassault Falcon 2000 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானத்தின் மதிப்பு ரூ.120 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் சூர்யா இந்த தகவலை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. திரைத்துறையை சேர்ந்த நடிகர் ஷாருக் கான் , அமிதாப் பச்சன் , பிரியங்கா சோப்ரா , அல்லு அர்ஜுன் , ராம் சரண் உள்ளிட்டோர் சொகுசு விமானங்களுக்கு சொந்தக்காரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 



கொட்டுக்காளி -வாழை முதல் நாள் வசூல் :


மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை மற்றும் பி.எஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி நடிப்பில் வெளியான கொட்டுக்காளி ஆகிய இரு திரைப்படங்களும் நேற்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல பாராட்டுகளை பெற்று வருகின்றன. முதல் வசூல் வசூலை பொறுத்த  அறையில் கொட்டுக்காளி 47 லட்சமும், வாழை படம் 1.35 கோடியும் வசூல் செய்துள்ளதாக சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது.  



'கூலி' படத்தில் கன்னட நடிகர் :


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் முதல் துவங்கியது. இப்படத்தில் நடிகர் சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், மலையாள நடிகர் செளபின் ஷாஹிர், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா உள்ளிட்டோர் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் தற்போது கன்னட நடிகர் உபேந்திரா நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 



'தி கோட்' வெளியாவதில் சிக்கல் :


வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தி கோட் படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தி கோட் படத்திற்கு சென்ஸார் வாரியம் U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படத்தின்  நீளம் 2 மணி நேரம் 59 நிமிடங்கள் . படம் வெளியான இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்படத்திற்கான ப்ரோமோஷன் துவங்கப்பட்ட நிலையில் இந்தி வெர்ஷனுக்கு மட்டும் குறைவான ப்ரோமோஷன் தான் செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தி டப்பிங்கில் படம் வெளியாக வாய்ப்புகள் குறைவாகவே இருப்பதாக சமூக வலைதளத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன . வட மாநிலங்களிலும் குறைவாகவே ப்ரோமோஷன் செய்யப்பட்டுள்ளதால் பெரிய அளவு வரவேற்பு கிடைக்காதோ என அஞ்சப்படுகிறது. 



சிக்கலில் நாகர்ஜுனா :


முன்னணி தெலுங்கு நடிகர்களில் ஒருவரான நடிகர் நாகர்ஜுனா, தெலங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத்தில் என் கன்வென்சன் என்ற பெயரில் சொந்தமான கட்டிடம் உள்ளது. அதி நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய மூன்று பெரிய மண்டபங்களை கொண்டது. பல்வேறு திருமண நிகழ்ச்சிகள், அரசியல்  நிகழ்வுகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகள் இந்த கட்டிடத்தில் நடைபெற்று வந்தன. ஏரிக்கு சொந்தமான 3.5 ஏக்கர் நிலத்தை  ஆக்கிரமித்து இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது என அதிகாரிகள் அதை இடித்து தரைமட்டம் ஆக்கியுள்ளனர். இந்த சம்பவம் தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.