ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகி வரும் செம்பருந்தி சீரியல் கதாநாயகியாக நடித்து வருபவர் ஷபானா.செம்பருத்தி சீரியல் மிகப் பிரபலமானதை தொடர்ந்து ஷபானாவும் பிரபலமடைந்தார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமும் உருவானது. இந்த நிலையில் இவரும் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பாக்யலட்சுமி சீரியலில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆரியனும் இருவரும் காதலிப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது.


இதனைத்தொடர்ந்து ரசிகர்கள் ஷபானாவிடம் இது குறித்தான கேள்விகளை  தொடர்ந்து முன்வைத்தனர். அதனைத்தொடர்ந்து தான் ஆர்யனுடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு தங்களுக்கிடையேயான காதலை உறுதிப்படுத்தினார் ஷபானா.


அதன் தொடர்ச்சியாக கடந்த செப்டம்பரில் இருவருக்கு இடையே நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிலையில் எப்போது கல்யாணம் என ரசிகர்கள் தொடர்ந்து ஷபானாவிடம் கேட்டு வந்தனர். இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்கும் வகையில் நேற்று ஷபானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, திருமண வாழ்கைக்குள் நுழையும் தன்னை ஆசிர்வதிக்கும் படி கேட்டுக்கொண்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.






 


இந்த நிலையில் ஷபானாவை கரம் பிடித்துள்ள ஆர்யன் யார் என்பதை பார்க்கலாம். ஆர்யன் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர். இவரின் இயற்பெயர் வேலு லட்சுமணன். இவரின் வயது 27. 1994 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் தேதி பிறந்தார். வேலம்மாள் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த ஆர்யன்வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பட்டப்படிப்பு முடித்துள்ளார். மிஸ்டர் செளத் இந்தியா 2019 வின்னர் ஆர்யன் ஆவார். 






 


சினிமா மீது பெரும் ஆர்வம் கொண்ட சினிமாவில் களம் இறங்குவதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார். அதன்படி மாடலிங், குறும் படங்களில் உள்ளிட்டவற்றில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தி வந்தார். இதில் பல விருதுகளை வென்ற ஆர்யனுக்கு விஜய் டிவியின் கடைக்குட்டி சிங்கம் சீரியல் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதில் துணை நடிகராக அவர் நடித்து வந்த நிலையில், அதனைத்தொடர்ந்து அவருக்கு விஜய் டிவியின் பாக்யலட்சுமி சீரியலில் செழியன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த தொடரில் அவரின் ஒரு நாள் சம்பளம் 10,000 வரை இருக்கும் சொல்லப்படுகிறது.