உதயநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 


 “ரெட் ஜெயிண்ட் மூவிஸ்" நிறுவனத்தின் மூலம் இன்று தமிழ் சினிமாவின் ஒரு முக்கியமான தயாரிப்பாளராகவும் விநியோகஸ்தராகவும் திகழும் உதயநிதி முதலில் தயாரித்த திரைப்படம் 2009ம் ஆண்டு வெளியான 'குருவி'.  அதனை தொடர்ந்து பல திரைப்படங்களை தயாரித்தவருக்கு நடிப்பு மீதும் காதல் வர, 2012ம் ஆண்டு வெளியான "ஒரு கல் ஒரு கண்ணாடி" திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க, சில மாதங்கள் நடிக்காமல் இருந்த அவர், பின்னர் அதே பாணியில் ‘ இது கதிர்வேலன் காதல்’ ‘நண்பேன்டா’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். 


 






ஆனால், இந்த படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. அதனைத்தொடர்ந்து ரூட்டை மாற்றிய உதய், கண்ணே கலைமானே, மனிதன், சைக்கோ, நெஞ்சுக்கு நீதி, போன்ற சீரியஸான திரைப்படங்களில் நடித்தார். இதில் மனிதன், சைக்கோ, நெஞ்சுக்கு நீதி உள்ளிட்ட படங்களில் உதயின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. இறுதியாக இவரது நடிப்பில் உதய் நடிப்பில் வெளியான கலகத்தலைவன் திரைப்படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில், இவரது நடிப்பில் அடுத்ததாக  ‘மாமன்னன்’ படம் வெளியாக இருக்கிறது. இதற்கு அடுத்ததாக, கமல் தயாரிக்கும் படத்தில் கமிட் ஆகியிருக்கும் உதய்நிதி, இன்று தனது 45 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.


இந்த நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில்,  உருவாகியிருக்கும் ‘ கண்ணை நம்பாதே’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. 


 




கடந்த 2019 ஆம் ஆண்டே இந்தப்படத்திற்கு பூஜை போடப்பட்டது. இயக்குநர் மாறன் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு விக்ரம் வேதா இசை புகழ் சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். இந்தப்படத்தில்  ‘மீசைய முறுக்கு’ படத்தில் நடித்ததின் மூலம் கவனம் ஈர்த்த நடிகை ஆத்மிகா, நடிகை பூமிகா, நடிகர் சதிஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். க்ரைம் திரில்லர் ஜானரில் உருவாகும் இந்தப்படத்திற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார்.