மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா டிவிட்டரில் ஆக்டிவாக இருப்பவர். பல கருத்துகள், நெகிழ்ச்சியான வீடீயோக்கள் உள்பட எதாவது ஒரு விஷயத்தை பற்றி தனது கருத்தை தயக்கமின்றி வெளிப்படுத்துபவர் ஆனந்த் மகிந்திரா. அப்படி,இன்று அவரின் டிவிட்டரில் ஒருவர் கேட்க கேள்விக்கு அழகான பதிலை அளித்துள்ளார்.
ஆனந்த் மகிந்திரா டிவிட்டரில் வைபவ் (Vaibhav SD) என்பர் “ சார், நீங்கள் என்ன படித்திருக்கீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?” என்று கேட்டார். இதற்கு ஆனந்த் மகிந்திரா கூறிய பதிலை டிவிட்டரில் அனைவரும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.
இந்தக் கேள்விக்கு ஆனந்த் மகிந்திரா, “என வயதில், நான் என்னுடைய படிப்பறிவாக நினைப்பது என் அனுபவத்தைதான்.” என்று கூறியுள்ளார்.
இதற்கு பலரும் தங்களது கருத்துகளகை தெரிவித்து வருகின்றனர்.