சினிமாவில் வாய்ப்பு பெறுவதற்காக தனது அம்மாவையும் அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய சொன்னதாக சின்னத்திரை நடிகை கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இளம் தொலைக்காட்சி நடிகையான ஸ்ரீநிதி 2020 ஜூலை  27 முதல்  2022 ஏப்ரல் 13 வரை விஜய் டிவியில் ஒளிபரப்பான 'செந்தூரபூவே' சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். 22 வயதான அவர், அந்த சீரியலில் மிகவும் வயதான பெண்ணாக நடித்து  ரசிகர்களை கவர்ந்துள்ளார்.


ஸ்ரீநிதி சமூகவலைதளங்களில் சுறுசுறுப்பாக இருக்கிறார் மற்றும் அவரது ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து அவரது ரீல்ஸ்களுக்கு  ஆதரவு கொடுத்து வருகின்றனர். நடிகை சமீபத்தில் அளித்த பேட்டியில், சினிமா துறையில் காஸ்டிங் கோச் அச்சுறுத்தலை தானும் அனுபவித்ததாக தெரிவித்துள்ளார்.


இது குறித்து பேசிய அவர், ’’தனது பதின்பருவத்தில் இருந்தபோது ஒரு பெரிய பட்ஜெட் பெரிய ஹீரோ படத்தில் ஒரு பாத்திரத்திற்காக ஆடிஷனுக்கு அழைக்கப்பட்டார். தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஒருவர்,  “அட்ஜஸ்ட்மென்ட்”  செய்யத் தயாரா என்று கேட்டார். இந்த வார்த்தையை உண்மையில் என்னெவென்று எடுத்துக் கொண்டார் என்றால், அவர்கள் கொடுக்கும் எந்த அறையையும் எடுத்துக்கொள்வேன் என்றும், உணவு மற்றும் பயணத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம்  என்றும் நினைத்துக்கொண்டு சரி என்று கூறினார்.




அப்போது அந்த நபர், சினிமா துறையில் நல்ல வேடங்களில் நடிக்கும் வாய்ப்புக்காக பாலியல் சலுகைகளை வழங்குவதே “அட்ஜஸ்ட்மென்ட்” என்று கூறியிருந்தார். அதிர்ச்சியடைந்த ஸ்ரீநிதி மறுத்துவிட்டார். மேலும் அந்த நபர் தனக்கு விருப்பமில்லை என்றால் பரவாயில்லை. ஆனால் அவருக்கு பதிலாக அம்மா அதைச் செய்யலாம் என்று பரிந்துரைத்ததால் அவர் மேலும் அதிர்ச்சியடைந்தார். அந்த சம்பவத்திற்கு பிறகு அப்படிப்பட்டவர்களை கையாள்வதில் கவனமாக இருப்பதாக ஸ்ரீநிதி கூறியுள்ளார். ஸ்ரீநிதியின் இந்த தகவல் சின்னத்திரை, வெள்ளித்திரையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண