1.செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா...
‛‛கோயில் அம்மனுக்கு
சூடம் காட்டு
அத நேரில் காட்டு
2.தண்ணி கருத்திருச்சு.. தவளை...
‛‛மெதுவா போடுது தூரல்அடி மேல தெளிக்குது சாரல்மெதுவா போடுது தூரல்அடி மேல தெளிக்குது சாரல்ஒடம்போ எனக்கு சூடா இருக்குசில்லுனு தான் நெஞ்சம்நான் சேர்ந்துக்குவா கொஞ்சம்மத்ததுக்கா பஞ்சம்நீ மல்லிக பூ மஞ்சம்ரகசிய உறவிருக்கு.. நமக்குஏய்.. கிட்ட கிட்ட வந்து வந்துகட்டிக்கடி..ஈ….அட்டைய போல்.. சட்டுனுதான்..ஒட்டிக்கடி..ஈ..தண்ணி கருத்திருச்சு கண்ணுதவள சத்தம் கேட்டிருச்சு...’’
ரீமேக் செய்யும் அளவிற்கு பிரபலமான பாடல். 80களில் வீட்டு நிகழ்ச்சிகளில் ரோடியோக்களில் எங்கு பார்த்தாலும் கேட்கப்பட்ட பாடல்!
3.ஆகாய கங்கை... பூந்தேன் மலர் சூடி...
‛‛காதல் நெஞ்சில் ஹேய்.. மேள தாளம்.. ஹா காதல் நெஞ்சில் ஹேய்.. மேள தாளம்.. ஹா..காலை வேளை பாடும் பூபாளம்மானே ஏ..நீ... உன் தோளிலே...படரும் கோடி நானே பருவ பூ தானேபூமஞ்சம் உன்மேனி எந்நாளில் அரங்கேறுமோ..
குங்கும தேரில் நான் தேடிய தேவன்சீதா புகழ் ராமன்மேடை கட்டி மேளம் தட்டிபாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம்...’’
தர்மயுத்தம் படத்தில் இசைஞானி இசையில் சூப்பர் ஸ்டாருக்காக வாசு சார் பாடிய இந்த பாடலை கேட்டுப்பாருங்கள்...!
4.தங்கச் சங்கிலி மின்னும்....
‛‛காவல் நூறு மீறிகாதல் செய்யும் தேவிஉன் சேலையில் பூ வேலைகள்உன் மேனியில் பூஞ்சோலைகள் அந்திப் பூ விரியும்அதன் ரகசியம் சந்தித்தால் தெரியும்இவளின் கணவு கனியும் வரையில்விடியாது திருமகள் இரவுகள்தங்கச் சங்கிலி...’’
வைரமுத்து வரிகளில் இளையராஜா இசைவில் வாசு-ஜானகி பாடிய டூயட். மனதை கொத்தாக பிடுங்கிச் செல்லும் பாடல்!
5.போக்கிரிக்கு போக்கிரி ராஜா...
‛‛வெத்தலைய போட்டு செவந்ததுஎன்னோட வாயிஒட்டி ஒட்டி செவந்திருக்குஉன்னோட வாயி
இரு உடம்பிருக்குஒரு மனசு நம்மோட தானேஇனி தெனம் தெனமும்சொகம் இருக்கும் சிந்தாத தேனே
தொட்டு தொட்டு சின்ன பொண்ணசூடா ஆக்குறதொந்தரவு செஞ்சு நீயும்ஏதோ கேக்குற...’’
எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், கங்கை அமரன் வரிகளில் வாசு -ஜானகி குரலில் வெளுத்து வாங்கிய பாடல்... கேட்டு, பார்த்து ஒரு முடிவுக்கு வாங்க!
இது போல் இன்னும் பல ஹிட் பாடல்கள் வாசு சார் வரிசையில் உள்ளது. அதையெல்லாம் பட்டியலிட பக்கங்கள் போதாது.
மேலும் படிக்க: ‛பூங்காற்று திரும்புமா...’ வாசு சாரை பார்க்க முடியுமா...!