தன் மீதும் தன்னை நம்பும் மக்களின் மீதும் இருக்கும் தீராக் காதல் தான் சீமானின் அரசியலுக்கு காரணம் என இயக்குநர் சேரன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விடுதலை தாகத்தின் பயணம்
இதுதொடர்பாக எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், “திமுகவிடம் பெட்டி வாங்கிட்டு எதுக்கு சீமான் இவ்வளவு அலையனும் என்ற கேள்வி யாருக்காவது வருமா இந்த தகவல்களை படிக்கும்போது... வந்தால் அவன் யோசிக்கிறான்னு அர்த்தம்.. இல்லைன்னா அவங்களுக்கு என்ன சொன்னாலும் புரியாது.. திமுக A team, BJP B team, அதிமுக அடுத்த team அப்படின்னு சொன்னா காச வாங்கிட்டு கடனுக்கு நாலு இடத்துல பேசிட்டு சொகுசா படுத்து தூங்கலாம் ஏசி ரூம்ல... ஆனால் ஒரு மனிதன் வெயில், மழை, இரவு, பகல் எதையும் பொருட்படுத்தாமல் இவ்வளவு உழைப்பது என்பது காசு வாங்கிட்டு கட்சி நடத்துற எவனாலயும் முடியாத ஒன்று.
ரத்தித்திலும் உடலிலும் மனதிலும் மூர்க்கத்தனமாக உருவேற்றி வைத்திருக்கும் விடுதலை தாகத்தின் பயணம் இது. தன் மீதும் தன்னை நம்பும் மக்களின் மீதும் இருக்கும் தீராக் காதல்.. வெற்றி இலக்கல்ல... வேண்டிய விடுதலைக்கான சிந்தனை தூண்டுதலே இலக்கு... இல்லையென்றால் எந்த தலைவனாவது ஓட்டு போடலைன்னாலும் வருத்தமில்லைன்னு சொல்வானா... சீமான் உழைப்பிலும் சிந்தனையிலும் நம்பிக்கையிலும் நம் முன் உயர்ந்து நிற்கிறார்.
அவரை நம்பி அவருடன் கரம் கோர்த்து 233 தம்பி தங்கைகள் நிற்கிறார்கள்.. இவர்களின் நம்பிக்கை என்றும் தோற்ககூடாது... பரப்புங்கள்.. கேள்வி கேளுங்கள் மக்களிடம் ஏன் வாக்களிக்க கூடாது என ஏன் மாற்றம் வேண்டும் என சிந்தியுங்கள். அதுவே வெற்றி மக்கள் சித்தாந்தத்தில்" என சேரன் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வழக்கம்போல நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது. அக்கட்சி 117 தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களையும், 117 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களையும் களமிறக்கியுள்ளது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பரப்புரை செய்து வருகிறார். இந்த நிலையில் இயக்குநர் சேரன் சீமானுக்கு தீவிரமாக ஆதரவு தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
