‛அவன் அவன் எடுக்கிற முடிவு... அவனவனுக்கு சாதகமா தான் இருக்கு...’ என்பது யாருக்கு பொருந்துமோ இல்லை யோ... சிக்காவுக்கு கனகச்சிதமா பொருந்துது. ரவுடிபேபி சூர்யாவிடம் பிரிந்து மதுரையில் தனிமையில் கிடந்தவரை சூர்யா தேவி செருப்பால் அடிக்க, அவர் மீது சிக்கா போலீசில் புகார் கொடுக்க, வழக்கம் போல போலீஸ் நடவடிக்கை எடுக்காம இருக்க, அதை கண்டிச்சு மீசையை எடுப்பேன்னு சிக்கா முடிவு எடுக்க, ஞாயிற்று கிழமை சொன்னபடி மீசையை எடுத்தாச்சு. 




மீசையை எடுத்து பரிதாபமா இருந்த சிக்காவை பார்த்து, பிரிந்திருந்த ரவுடி பேபிக்கு மீண்டும் காதல் மலர, திருப்பூர் வீட்டை காலி பண்ணிட்டு இப்போ மதுரை வந்துட்டாங்க ரவுடி பேபி சூர்யா. மீண்டும் சிக்கா-ரவுடிபேபி கூட்டணி சேர்ந்தாச்சு. முழுசா ஒரு நாள் கூட ஆகலை. அதுக்குள்ள ரெண்டு பேரும் அடிச்சுக்க... இல்லை இல்லை சிக்கா அடி வாங்க ஆரம்பிச்சுட்டாப்ல. பெரிய பஞ்சாயத்தெல்லாம் ஒன்னும் இல்ல... டெய்லி மீன் வாங்கி திண்ட்டே இருக்காப்லயாம்... சம்பாதிக்கிற எல்லாமே திண்ணு அழிக்கிறாப்லயாம்... இது தான் ரவுடி பேபி குற்றச்சாட்டு. அதையும் வீடியோ எடுத்து போட்டிருக்காங்க. வீடியோ ஆரம்பிக்கும் போது நல்லாதான் இருந்தது. முடியும் போது, கர்ண கொடூரம். வீடியோவில் அவர்கள் பேசியதை எழுத்து வடிவில் படிக்கலாம்...




 


ரவுடிபேபி: சமைக்க என்ன வாங்கிட்டு வந்த?


சிக்கா: சமைக்க மீன் வாங்கிட்டு வந்தேன்..!


ரவுடி பேபி: நேத்து தானே 3 கிலோ வாங்கிட்டு வந்த... இன்னைக்கு என்ன... இது தான் சிக்கனமா வாழ்க்கை நடத்துற லட்சணமா...?


சிக்கா: ஒரு கிலோ தான் வாங்கிட்டு வந்தேன்


ரவுடி பேபி: இப்படி திண்ணுட்டு இருந்தா ஒருத்தன் கூட நமக்கு வீடு தரமாட்டான்


சிக்கா: ஒரு கிலோ தானே!


ரவுடிபேபி: ஒரு கிலோ உனக்கே பத்தாது... எனக்கே பத்தாது...


சிக்கா: இங்கே பாரு... போய் மிளகாய் பொடி போட்டு வை... நான் வந்து வறுக்கிறேன்.


ரவுடி பேபி: நேத்து தானே மீன் வாங்கி திண்ண... இன்னைக்கு என்ன...


சிக்கா: ஒரு கிலோ தானே...கெலங்கான் மீன் தான்...


ரவுடி பேபி: இங்கே பாரு... திருப்பூர்ல இந்த பாடு படுத்தினீயேனு தான் மதுரை வந்தேன். நீ பேசுறதுக்கெல்லாம் மண்டையாட்டுவேன்னு நெனச்சீயா... அரை மணி நேரத்தில் ஊரை காலி பண்ணிடுவேன். 


சிக்கா: 10 ஆயிரம் கொடுத்து ஷிப்ட் பண்ணிருக்கேன். மறுபடியும் 10 ஆயிரம் தரமுடியாது. 


ரவுடி பேபி: அதுக்காக நீ பேசுறதுக்கெல்லாம் (எழுத முடியாது) கம்முனு இருப்பேன் நெனச்சியா


சிக்கா: தேவையில்லாதது பேசாத போ...


ரவுடி பேபி: யாரை கேட்டு மீசை எடுத்த...


சிக்கா: ஒரு ப்ளோல எடுத்துட்டேன்...


ரவுடி பேபி: ப்ளோல எடுத்தா இங்கே ஏன் வந்த... அங்கே போக வேண்டியது தானே


சிக்கா: விடு... உசுப்பேத்திவிட்டாங்கே... எடுத்துட்டேன்


ரவுடிபேபி: மீசையோடு உன்னை பார்க்க சகிக்காது... இதுல மீசையை எடுத்துட்டு ரொமான்ஸ் பண்ண வந்துட்ட


சிக்கா: இப்போ என்ன சொல்ற...


ரவுடி பேபி: இப்படி திண்ணுட்டே இருந்தா எப்படி வெலங்கும். 


சிக்கா: நான் மட்டும் தான் திங்குறேனா... நீங்க 3 பேரும் என்ன வாய் பாக்குறீங்களா...


ரவுடிபேபி: பச்சை மண்ணு அது ஒரு அரை மீன் திங்குது... இன்னொன்னு கால் மீன் திங்குது... எல்லாத்தையும் நீ தான் திங்குற...


சிக்கா : ஆமா திங்குது... காலையில் ஒரு கிலோ ஆப்பிள் வாங்கிட்டு வந்தேன். முக்கால் கிலோவை திண்ணுட்டான்.


ரவுடிபேபி: வர வழியில் நீ திண்ணுட்டு அவிங்களை சொல்லாத


சிக்கா: யேய்... ஆப்பிளை அவன் திண்ணுருக்கான்... மாதுளையை அவன் திண்ணுருக்கான். வாங்குறது நானு... திங்கிறது நீயா


ரவுடிபேபி: இவ்வளவு திங்குறீயே உன் உடம்பில ஒட்டுதா பார்த்தியா...!


சிக்கா: மீசை எடுத்துட்டு மன்மதன் சிம்பு மாதிரி இருக்கேன் பார்த்தீயா


ரவுடிபேபி: இங்கே பாரு சிம்புவையெல்லாம் இழுக்காத... அவர் கல்யாணம் பண்ணாம இன்னும் வாழ்ந்துட்டு இருக்காரு


சிக்கா: நானும் கல்யாணம் பண்ணாம தான் வாழ்ந்துட்டு இருக்கேன். 


ரவுடிபேபி: வெட்கம் இல்லாம பேசாத.. சேவிங் பண்ண மலைக்குரங்கு மாதிரி இருக்க. சல்மான்கானாம்


சிக்கா: சல்மான் கான் தம்பினு தாண்டி சொன்னேன்


ரவுடிபேபி: உள்ளாடையை கூட மடிக்க மாட்டீயா.. தேவையில்லாம பேசுன... அடி வெளுத்துடுவேன் பார்த்துக்க(அடியும் விழுகிறது)


சிக்கா:  தேவையில்லாமல் பேசாத... போயிடு... தத்தை தத்தை தத்தை... பல ஆத்தை பெத்த தத்தை(பாடுகிறார்)


(அதன் பின் பேசியதும்... நடந்ததும் எழுத்தில் ஏற்ற முடியாதது... முழு கொடுமையை பார்க்க நினைத்தால் கீழே இருக்கும் வீடியோ பார்க்கலாம்)