அஜித்தை வைத்து, நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களை இயக்கியவர் எச். வினோத். வெகு சில படங்களே இயக்கியிருந்தாலும், மக்களின் மனங்களில் பதியும் அளவிற்கு கதைகளை எடுத்துள்ளார். அஜித்தை வைத்து இவர் இயக்கும் அடுத்த படம், துணிவு. இப்படத்தை ரெட் ஜெயின்ட் மூவிஸ் தயாரிக்க, ஜிப்ரான் இசையமைக்கிறார். மலையாள நடிகை மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கோக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படம், பொங்கலன்று திரைக்கு வருகிறது. 




துணிவு பொங்கல்:


அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு படமும், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படமும் இந்த வருடபொங்கலிற்கு க்ளாஷாக காத்திருக்கிறது. விஜய்-அஜித்தின் படம் நிண்ட நாட்களுக்கு பிறகு ஒரே சமயத்தில் வெளியாவதால், சினிமா ரசிகர்கள் “என்ன நடக்க காத்திருக்கோ..” என ஆவலுடன் உள்ளனர்.


எச் வினோத்-அஜித் கூட்டணியில் முன்னதாக உருவான வலிமை படம் குறித்த தகல்களுக்காக ரசிகர்கள் நெடுநாட்களாக காத்திருக்க வேண்டிய நிலை வந்தது. படக்குழு, படக்குழுவினரை சார்ந்தவர்கள், கிரிக்கெட் வீரர்கள் என ஒருவரையும் விடாமால், “வலிமை அப்டேட்..வலிமை அப்டேட்” என ரசிகர்கள் நச்சரித்தனர். அப்போது செய்தது போன்ற தவறை, மறுபடியும் ரிபீட் செய்யக்கூடாது என முடிவெடுத்துள்ள வலிமை படக்குழு, போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகிறது. அது மட்டுமன்றி, படம் குறித்த செய்திகளையும் அடத்தடுத்து வெளியிட்டு வருகிறது. அவ்வகையில், துணிவு படத்தின் முக்கிய தூண் ஆன மஞ்சு வாரியரும் ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.


மஞ்சு வாரியர் வெளியிட்ட செய்தி:


துணிவு படத்தின் டப்பிங் பணிகளும், க்ராஃபிக்ஸ் பணிகளும் ஜெட் வேகத்தில் நடைப்பெற்று வருகின்றன. படத்தில் நடித்துள்ள நடிகர்களும், வேகமாக தங்களது டப்பிங் பணணிகளை முடித்து வருகின்றனர். அவ்வகையில், நடிகை மஞ்சு வாரியரும் தான் துணிவு படத்தில் டப்பிங் பேசி வருவதாக தனது சமூக வலைதள பக்கத்தில் போஸ்ட் போட்டுள்ளார். 






காதில் ஹேட்ஃபோன்சுடன் புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ள அவர், “No Guts, No Glory” என தனது கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள், இந்த செய்தியை வைராக்கி வருகின்றனர்.