அஜித்தை வைத்து, நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களை இயக்கியவர் எச். வினோத். வெகு சில படங்களே இயக்கியிருந்தாலும், மக்களின் மனங்களில் பதியும் அளவிற்கு கதைகளை எடுத்துள்ளார். அஜித்தை வைத்து இவர் இயக்கும் அடுத்த படம், துணிவு. இப்படத்தை ரெட் ஜெயின்ட் மூவிஸ் தயாரிக்க, ஜிப்ரான் இசையமைக்கிறார். மலையாள நடிகை மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கோக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படம், பொங்கலன்று திரைக்கு வருகிறது.


துணிவு படத்தின் அடுத்தடுத்த அப்டேட்:


துணிவு படமும், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படமும் இந்த வருடபொங்கலிற்கு க்ளாஷாக காத்திருக்கிறது. விஜய்-அஜித்தின் படம் நிண்ட நாட்களுக்கு பிறகு ஒரே சமயத்தில் வெளியாவதால், சினிமா ரசிகர்கள் “என்ன நடக்க காத்திருக்கோ..” என ஆவலுடன் உள்ளனர். வலிமை படக்குழு, போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகிறது. அது மட்டுமன்றி, படம் குறித்த செய்திகளையும் அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது. 


சிறிது நாட்களுக்கு முன்பு, நடிகர் அஜித் டப்பிங் பணியில் இருக்கும் போட்டோ வெளியாகி வைரலானது. அதற்கு முன்னர், வலிமை படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள நடிகை மஞ்சு வாரியரும் தான் டப்பிங் பேசும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குஷிபடுத்தினார். சமீபத்தில், துணிவு படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் நடிகர் அஜித் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து, அஜித் தரப்பில் இருந்து அந்த தகவல் மறுக்கப்பட்டது. 


அஜித் ரசிகர்கள் செய்யும் வித்தியாசமான  ப்ரமோஷன்!



விரைவில் வெளிவரவுள்ள துணிவு படத்தினை பிரபலப்படுத்தும் வகையில், வித்தியாசமான ப்ரமோஷன் பணிகளில் மலேசியாவைச் சேர்ந்த அஜித் ரசிகர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.  மலேசிய அஜித் ரசிகர் மன்றம், Thunivu Futsal என்ற பெயரில் கால்பந்து போட்டிகளை நடத்தி வருகிறது. அது மட்டுமன்றி, இங்கே விநியோகிக்கப்படும் தண்ணீர் பாட்டில்களில் முதற்கொண்டு, வெற்றி பெற்றவர்களுக்கு அளிக்கப்படும் மெடல்கள் என அனைத்திலும் அஜித் படத்துடன் கூடிய ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டுள்ளது. 




ரசிகர்களின் இந்த செயல், கால்பந்து விளையாட்டினை ஊக்குவிக்கும் வகையிலும், துணிவு படத்தினை மக்களிடையே பிரபலப்படுத்தும் வகையிலும் உள்ளது. அஜித் ரசிகர்கள் பலர், அவரது பட ரிலீஸின் போது பால் அபிஷேகம் செய்வது, கட்-அவுட் வைப்பது என்று சுற்றித்திரியும் நிலையில், மலேசிய ரசிகர்களின் இந்த செயல் பலரிடையே நெகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இப்போட்டிகளை நடத்திவரும் மலேசிய ரசிகர் மன்ற குழுவினரை அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். 


 






துணிவு படம், மலேசிய வரலாற்றில் முதன் முறையாக பத்து நகரங்களில் ரிலீஸாக உள்ளதாக அங்குள்ள ஆஜித் ரசிகர் மன்றம் தெரிவித்துள்ளது. அது மட்டுமன்றி, தொடர்ந்து நான்காவது முறையாக மலேசிய அஜித் ரசிகர் மன்றம் விளையாட்டு போட்டிகளை நடத்துவது குறிப்பிடத்தக்கது. 


இவர்களது இந்த துணிவு புட்சால் போட்டிக்கான புகைப்படங்கள் சமூக வலைதங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.