லிங்குசாமிக்கு வாய்ப்பு கொடுத்தது ஏன் என்று நடிகர் ராம் பொத்தினேனி ஏபிபி நாடு செய்தி நிறுவனத்திற்கு பிரேத்யமாக பேட்டி அளித்துள்ளார். 


தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக இருந்தவர் இயக்குநர் லிங்குசாமி. இவர் எடுத்த ரன், சண்டைக்கோழி பாகம் 1, பீமா, பையா உள்ளிட்ட  படங்களில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. மார்க்கெட்டின் உச்சியில் இருந்த அவர் சூர்யாவுடன் அஞ்சான் படத்தில் கைகோர்த்தார்.


ஆனால் அந்தப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதனையடுத்து கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்ட லிங்குசாமி, தொடர்ந்து சண்டைக்கோழி படத்தின் இராண்டாம் பாகத்தை எடுத்தார். ஆனால் இந்தப்படமும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெற வில்லை. இந்த நிலையில் நெடுநாளாக பெரிய வெற்றியை கொடுக்க போராடி வந்த லிங்குசாமிக்கு தி வாரியர் படத்தில் வாய்ப்பளித்தார் தெலுங்கு முன்னணி நடிகரான ராம் பொத்தினேனி. இந்த நிலையில் லிங்கு சாமிக்கு வாய்ப்பு கொடுத்தது ஏன் என்ற கேள்விக்கு  ராம் ஏபிபி நாடு செய்தி நிறுவனத்திற்கு பிரேத்யமாக பேட்டியளித்துள்ளார். 



அந்தப் பேட்டியில், “ ஒருவன் திறமையாளனாக இருந்தால் அவனுக்கு, அவனது வாழ்வில் பல முகங்கள் வந்து போகும். இவர்களெல்லாம்  வைரம் மாதிரி. அவர்கள் ஒரு கட்டத்தில் சூழ்நிலை காரணமாக நின்று விட்டால், அவர்கள் மீது தூசி படியும். அதையெல்லாம் துடைத்து விட்டால் பார்த்தால் அங்கு வைரம்தான் இருக்கும். அதனால்தான் இந்த வாய்ப்பை அவருக்கு கொடுத்தேன்” என்றார்.  


 






தி வாரியர் படத்தை இயக்கி இருக்கிறார். இந்தப்படம் வருகிற 14-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.