அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் செந்தில் காலேஜ் படிப்புக்கு தொடர்ச்சியாக சிக்கல் ஏற்படும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 


இதுவரை நடந்தது என்ன?


நேற்றைய எபிசோடில் செந்தில் படிப்பு தொடர்பாக HOD-பேராசியர் இடையேயான மோதலால் , கல்லூரி முதல்வர் செந்திலை மீண்டும் எக்ஸாம் எழுத வேண்டும் என சொல்கிறார். இதனை கேள்விப்பட்ட உமா பேராசிரியருக்கு போன் செய்து செந்தில் பாஸ் ஆக கூடாது என சொல்கிறாள். இதற்கிடையில் இளங்கோ செந்திலிடம் என் தங்கச்சி எங்க வீட்டுக்கு வர்றது உங்க கையில தான் இருக்கு. நீங்க கல்யாணம் நடந்தப்போ சொன்ன பொய்யை சரி பண்றதுக்கு இது நல்ல சான்ஸ். எப்படியாவது என் தங்கச்சி ஆசையை நிறைவேத்திருங்க என சொல்லும் காட்சிகள் இடம்பெற்றது. 


இன்றைய எபிசோட் அப்டேட் 


இன்றைய எபிசோடில் செந்தில் அமுதாவிடம் HOD என்ன சொன்னாரு என கேட்க, இந்த எக்ஸாம்ல பாஸ் ஆகுறது கஷ்டம்னு தான் சொன்னாரு என சொல்கிறாள். உடனே செந்தில் நான் பாஸ் பண்ணிட்டா நீ என்ன தருவ என கேள்வியெழுப்ப,  நீங்க என்ன கேட்டாலும் தர்றேன் என சொல்லிவிட்டு அமுதா நகர்கிறாள்.  இதனையடுத்து வெளியே வரும் உமா செந்திலிடம் வம்பிழுக்கிறார். புத்தகத்தை எப்படி படிக்கணும்ன்னு தெரியுமா? இன்னும் ரெண்டு நாள்ல இந்த புக்கை எப்படி படிச்சி பாஸ் ஆகுறேன்னு நான் பார்க்குறேன் என நக்கலாக சொல்கிறார். இதனை மாணிக்கம் பார்த்து உமா பழனி இருவரையும் திட்டுகிறார். ஆனால் உமா செந்திலை படிக்கவிடக்கூடாது என சபதமெடுக்கிறார். 


இதனைத் தொடர்ந்து இரவு செந்தில் வெளியே அமர்ந்து படித்துக் கொண்டிருக்க ரவுடிகள் வந்து புக்கை பிடுங்கி எறிந்து செந்திலிடம் வம்பிழுக்கிறார்கள். அவர்களை கோபத்துடன் அவர்களை அடிக்க போக அமுதா வந்து அவனை தடுக்கிறாள். மேலும் செந்திலிடம் இதெல்லாம் அவங்களோட வேலை தான்.. உன்னை எப்படியாவது உள்ள தூக்கி போட்டுரலாம்னு திட்டம் போடுறாங்க என சொல்லி உள்ளே அழைத்து செல்கிறாள். இதனைப் பார்த்த மாணிக்கம் அமுதாவிடம் இவன் நம்ம வீட்டுல இருந்தான்னா படிக்க விடாமாட்டனுங்க... இவனுக்கு பாதுகாப்பான ஒரு இடம் வேணும் என சொல்கிறார்.


அமுதா யோசித்தபடியே போனை எடுத்து செல்வாவுக்கு போன் செய்து அவனை வரவழைக்கிறார்.  அமுதா அவரிடம் இன்னும் ரெண்டு நாள்ல செந்திலுக்கு எக்ஸாம் இருக்கு. இவரை தூங்காம படிக்க வைக்க வேண்டியது உங்க பொறுப்பு என சொல்லும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.