மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் கார்த்திக் யமுனாவை சந்தித்து தன் அம்மா கூடுதல் நகை கேட்டாரா என கேள்வியெழுப்பும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம்பெறுகிறது. 


இதுவரை நடந்தது என்ன? 


நேற்றைய எபிசோடில் பத்திரிக்கை கொண்டு வீட்டுக்கு வரும் மீனாட்சியை புஷ்பாவும், நீதிமணியும் அவமானப்படுத்துகின்றனர். பின்னர் கோவிலுக்கு வரும் நீதிமணி மீனாட்சியிடம் புஷ்பாவுக்கு பயந்து அப்படி நடந்து கொண்டதாக கூறி மன்னிப்பு கேட்கிறான். யமுனாவை ஆசீர்வாதம் செய்து, நீதிமணி தன் தங்க சங்கிலியை யமுனாவிற்கு கொடுக்கிறான்.  அடுத்து ரங்கநாயகி வீட்டிற்கு மீனாட்சியும் துர்காவும் பத்திரிக்கை வைக்கச் செல்ல அங்கே பூஜா அவர்களை அவமானப்படுத்துகிறாள். பின் மீனாட்சி ரங்கநாயகிக்கு பத்திரிக்கை வைக்க அங்கு ரங்கநாயகியும் அவர்களை அவமானப்படுத்துகிறாள். செல்வமுருகன் சமாதானப்படுத்தி வெற்றியை கல்யாணத்திற்கு அனுப்பி வைப்பதாக கூறுகிறார்.


கார்த்திக்கின் அம்மா கோகிலா, நகை விஷயமாக மீனாட்சி வீட்டில் இருந்து எந்த தகவலும் வரவில்லை என்று கார்த்திக்கிடம் சொல்ல, கல்யாணத்தில் மீண்டும் சிக்கல் ஏற்படுமோ, என்று அதிர்ச்சி ஆகின்றான். மறுபக்கம் வெற்றி மீனாட்சி வீட்டில் கல்யாண வேலைகளை முன்னின்று செய்கிறான். 


இன்றைய எபிசோட் அப்டேட்


இன்றைய எபிசோடில் தனது கல்யாண பத்திரிக்கையை பார்த்து கார்த்திக் சந்தோஷப்படுகிறான்.  ஆனால் கல்யாணத்தில் எந்த பிரச்சினை வந்தாலும் நான் சொல்வதை தான் கேட்க வேண்டும் என்று கோகிலா கார்த்திக்கிடம் சத்தியம் வாங்குகிறாள். இதற்கிடையில் நகைக்கடைக்காரர் மீனாட்சியிடம் நகைகளை கொண்டு வந்து கொடுக்கிறார். பிறகு கார்த்திக் யமுனாவை சந்தித்து, எங்க அம்மா கூடுதலாக நகை ஏதாவது கேட்டார்களா என்று கேட்க அவள் இல்லை என்று சொல்கிறாள். 


அதன்பிறகு புஷ்பா வீட்டிற்கு பூஜா சென்று சக்திக்கு தெரியாமல் நீதிமணி மீனாட்சி பெயரில் எழுதி வைத்த பத்திரத்தை நான் எடுத்து கொண்டு, அதற்கு பதில் ரங்கநாயகியின் பத்திரத்தை வைத்து விட்டேன் என்று சொல்கிறாள். புஷ்பா கோகிலாவிடம் பத்திரம் மாறிய விஷயத்தை சொல்ல சக்தி வீட்டில் தங்கும் வெற்றி இரவில் பல்லிக்கு பயப்படுவதுபோல் சக்தியோடு விளையாடுகிறான். அப்போது கோகிலா மீனாட்சிக்கு போன் செய்து, நகைகளை பார்க்க நாளை வருவதாக சொல்கிறாள்.


மீனாட்சி வெற்றியிடம் கஷ்டப்பட்டு நகைகளை சேர்த்ததாக சொல்கிறாள், ஆனால் பரம்பரை நகைகள் புஷ்பாவிடம் இருக்கிறது அது எங்களிடமிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்று கூறி வருத்தப்படும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.