தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வீரா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பூ போட சேரில் ஏறிய வீரா தடுமாறி விழ போக மாறன் அதை தடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


அதாவது, வீரா மாறனுக்கு நன்றி சொல்ல அவன் நமக்குள்ள எதுக்கு நன்றி எல்லாம் என்று வெட்கப்பட வீரா நமக்குள்ள என்ன என்று கேட்க மாறன் தெரியாத மாதிரியே கேட்காத நாம ப்ரண்ட்ஸ் தானே என்று சமாளிக்கிறான். 


இதையடுத்து வீட்டில் கண்மணி ராகவனிடம் மாறன் தம்பி இருக்காரா? கிளம்பிட்டாரா என்று கேட்க ராகவன் அவன் கடையில் தான் இருக்கான், இப்போ எல்லாம் விடியுரத்துக்கு முன்னாடி கடைக்கு வந்துடுறான், கடைசி வரைக்கும் கடையில் தான் இருக்கிறான் என்று சொல்ல கண்மணி அப்போ கடையில் தான் ஏதோ ஒரு பொண்ணை காதலிக்கிறான் என்று முடிவெடுக்கிறாள். 


பிறகு கடைக்கு கிளம்பி வரும் கண்மணி ராகவனிடம் போனை கொடுத்து உங்க தம்பி கிட்ட கொடுத்துடுங்க என்று சொல்ல ராகவன் போனை எடுத்து போய் கொடுத்து, இப்போ எல்லாம் நீ சரியே இல்ல என்னனு கண்டுபிடிக்கிறேன் என்று கலாய்க்கிறான், இங்கே கண்மணி ராகவனின் லேப்டாப்பை நோண்டி பார்க்க சிசிடிவி புட்டேஜ் இருப்பதை கவனிக்கிறாள். 


அதை வைத்து கண்டுபிடிக்கலாம் என்று முயற்சி செய்ய மாறன் எல்லாரிடமும் சகஜமாக பேசுவதை பார்த்து குழப்பம் கொள்கிறாள். அதன் பிறகு மாறன் தண்ணீர் குடிக்க ரூமுக்கு செல்ல கடையில் இருப்பவர்கள் மாறன் உள்ளே போய் இருக்காரு, அப்போ கோட்டர் போட்டுட்டு தான் வெளியே வருவாரு என்று பேச வீரா இதை கேட்டு அந்த ரூமுக்குள் நுழைகிறாள். 


மாறன் தண்ணீர்குடிப்பதை  குடிப்பதை பார்த்த வீரா சரக்கு என்று நினைத்து நீ எல்லாம் திருந்தவே மாட்ட என்று திட்ட மாறன் இது பச்சை தண்ணி டி என்று பதில் சொல்கிறான், கடையில் பெண்களிடம் மாறனை பற்றி விசாரிக்கும் கண்மணி மேலே இருக்கும் குடோனுக்கு ஏறி வர வீராவும் மாறனும் ஒன்றாக இருப்பதை பார்த்து விடுவாளோ என்ற பில்டப் காட்சிகள் எகிறுகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய வீரா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.