Sita Raman: மதுமிதாவை பெண் கேட்டு போன மகாலட்சுமி.. சீதா ராமன் சீரியலில் காத்திருந்த அதிர்ச்சி

திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள சீதா ராமன் சீரியலில் பிரியங்கா நல்காரி நாயகியாகவும், ஜூஜி நாயகனாகவும் நடிக்கின்றனர்.

Continues below advertisement

சீதா ராமன் சீரியலில் மகாலட்சுமி மதுமிதா வீட்டுக்கு பெண் கேட்டு வரும் காட்சிகள் இடம் பெறுகிறது. 

Continues below advertisement

தொடர்ந்து புதுப்புது சீரியல்களை களமிறக்கி வரும் ஜீ தமிழ் சேனலில் அடுத்ததாக சீதா ராமன் என்ற சீரியல் ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது. திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள இந்த சீரியலில் பிரியங்கா நல்காரி நாயகியாகவும், ஜூஜி நாயகனாகவும் நடிக்கின்றனர். மேலும் ரேஷ்மா பசுபுலேட்டி நாயகனின் அம்மாவாக நடிக்க, பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர். 

நேற்றைய எபிசோடில் தசரா பண்டிகையில் மகாலட்சுமிக்கும், அவரது மகனான ராமுக்கும் மதுமிதாவை பார்த்தவுடன் பிடித்து போகிறது. ராம் கோயிலுக்கு வரும்போது சீதாவின் வண்டி ரிப்பேர் ஆகி நிற்க அவளுக்கு உதவி செய்கிறான்.  அப்போது சீதா சொன்ன நல்வாக்கு படி மதுமிதாவை சந்தித்ததால், மாலை ஒன்றை சீதாவுக்கு நன்றி கூறி கழுத்தில் போட்டுவிட்டு செல்லும் காட்சிகள் இடம் பெற்றது. 

இன்றைய எபிசோடில் ராம் தன்னுடைய அம்மா மகாலட்சுமியிடம் மதுமிதாவை பார்த்த விஷயத்தை சொல்கிறான். ஆனால் மகாலட்சுமி அதெல்லாம் வேண்டாம் நான் உனக்கு ஒரு பெண்ணை பார்த்திருக்கேன் என சொல்ல கடைசியில் இருவரும் மதுமிதா பற்றி தான் சொல்கின்றனர் என தெரிய வருகிறது. 

இதனைத் தொடர்ந்து மகாலட்சுமி மதுமிதாவின் அப்பா போலீஸ் என தெரிந்து ஸ்டேஷனுக்கு சென்று பெண் கேட்க அவர் இதெல்லாம் இங்க பேசுற விஷயமா என கோபப்படுகிறார்.  இதனையடுத்து அங்கு ராம் வர நீங்க என்ன இங்கே என கேட்க ராம் எனக்கு தான் பெண் கேட்பதாக சொல்ல அவர் சந்தோஷப்படுகிறார். 

உடனே வீட்டுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்கிறார். அடுத்து மகாலட்சுமி மதுமிதா வீட்டுக்கு பெண் கேட்டு வருகிறாள். ஆனால் மறுபக்கம் மதுமிதா ரெஜிஸ்டர் ஆபிஸில் தனது காதலனை திருமணம் செய்து கொள்ள தயாராகும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola