மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் சக்திக்கு பூஜா செய்த திருட்டுத்தனம் தெரிய வரும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.45 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. முன்னதாக பணம் ஏற்பாடு செய்து பத்திரத்தை ரங்கநாயகியிடம் ஒப்படைத்து விட்ட வெற்றி வேகமாக யமுனாவின் கல்யாணத்திற்கு புறப்படுகிறான்.


இந்த பக்கம் கோகிலாவிடம் பேசி எப்படியாவது கல்யாணத்தை நடத்தி விடலாம் என்று வேகமாக வந்த சக்தி கல்யாண மண்டபத்தில் யாரும் இல்லாமல் கல்யாணம் நின்று போய் யமுனாவும் மீனாட்சியும் அழுது கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். இதனைத் தொடர்ந்து பத்திரம் எப்படி மாறியது என்று கண்டுபிடிக்காமல் என சக்தி பிடிவாதமாக ரங்கநாயகியின் வீட்டுக்குள் செல்லாமல் வெளியில் நிற்கிறாள். இதன் பிறகு சரண்யா சக்திக்கு ஆறுதல் சொல்லி வெற்றி பத்திரத்தை மாற்றி இருக்க மாட்டான். ஏன் பூஜா செய்திருக்கக் கூடாது என சொல்ல சக்தி யோசிக்கும் காட்சிகள் இடம் பெற்றது. 


இன்றைய எபிசோட் அப்டேட்


இன்றைய எபிசோடில் சரண்யாவும் வெற்றியும் பூஜாவின் ரூமில் பத்திரத்தை தேட, பூஜா அதை பார்த்து விடுகிறாள். இதனையடுத்து யாருக்கும் தெரியாமல் அவள் பத்திரத்தை எடுத்து காலண்டரில் மறைத்து வைக்கிறாள். மறுபக்கம் யமுனா போன் செய்து சக்திக்கு ஆறுதல் சொல்லி, பத்திரம் கிடைத்ததா என்று விசாரிக்கிறாள். இதனிடையே பூஜா சக்தி இடத்திற்கு வந்து வேண்டுமென்றே அவளிடம் வம்பிழுக்கிறார். இதனால் டென்ஷாகும் சக்தி தன்னை யாரும் ஜெயிக்க முடியாது என்று பூஜாவிடம் சவால் விடுகிறாள்.


தொடர்ந்து வீட்டில் நடந்த பிரச்சனையால் வெற்றி வேலைக்குப் போக இருப்பதாக திடியனிடம் சொல்கிறான். ஆனால் ரங்கநாயகியின் மகனுக்கு இந்த ஊரில் யாரும் வேலை கொடுக்க மாட்டார்கள் என்று திடியன் கூறுகிறான். இதன் பிறகு யமுனாவும் கார்த்திக்கும் கோயிலில் சந்தித்து பேசுகிறார்கள். அப்போது கோகிலா கூடுதலாக நகை கேட்ட விஷயத்தை யமுனா கார்த்திக்கிடம் சொல்லி விடுகிறாள். புஷ்பாவை சந்தித்து பூஜா பத்திரம் கொடுத்ததை திடியன் வீடியோ எடுத்து விஷயத்தை சொல்லி, சக்திக்கு அனுப்பி வைக்கிறான். வீடியோவை பார்த்த சக்தி தைரியமாக திமிராக மிடுக்குடன் ரங்கநாயகியின் வீட்டுக்குள் அடி எடுத்து வைக்கும் காட்சிகள் இடம் பெறுகிறது.