SeethaRaman November 15: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீதா ராமன் சீரியலில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.


இன்றைய எப்சோட்


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வாக்கிங் கிளம்பிய மகா மற்றும் அர்ச்சனாவை முக்காடு போட்டுட்டு போக சொல்லி சீதா கலாய்த்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 


இந்த சீரியலில் நேற்றைய எபிசோட்டில் சீதா ரவுடிகளிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்த நிலையில் இன்று ரவுடிகள் அவர் தலையில் செங்கலை எடுத்து அடித்து கீழே சரிய வைக்கின்றனர்.  மறுபக்கம் அஞ்சலி சத்யா மற்றும் பிரியா என மூவரும் காலேஜிலிருந்து வீட்டுக்கு வர மீரா இவங்க தான் ஏதாவது செய்திருக்க வேண்டும் என்று சொல்ல சத்தியனும் சப்போர்ட் செய்து பேசுகிறான்.


ராம் செய்யப் போவது என்ன? 


பிறகு இவர்களை போலீசை வைத்து தான் விசாரிக்க வேண்டும் என சொல்லிவிட்டு ராம் ரூமுக்குள் சென்று அதை நினைத்து வருத்தப்பட்டு அழுகிறான். இங்கே ரவுடிகள் சீதாவை இப்படியே விடுவது நல்லது இல்லை என உயிரோடு புதைத்து விட திட்டம் போடுகின்றனர்.  


இங்கே ராம் ரூமில் முத்தாரம்மன் போட்டோவை வைத்துக் கொண்டு சீதாவை நினைத்து கலங்கி துடிக்க மறுபக்கம் ரவுடிகள் சீதாவை ஒரு சிமெண்ட் தொட்டிக்குள் வைத்து புதைக்க முயன்று வருகின்றனர். இப்படியான நிலையில் இன்றைய சீதாராமன் எபசோட் நிறைவு பெற்றது.




மேலும் படிக்க


Sabarimala Temple: பக்தர்களே கவனிங்க! சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை...நாளை நடை திறப்பு!


IND vs NZ Semi Final LIVE: அரைசதம் கடந்த கோலி; ஜெட் வேகத்தில் இந்தியாவின் ரன்ரேட்; செல்லா காசாக மாறும் நியூசிலாந்து பவுலிங்