Seetha Raman : விவாகரத்து பேப்பரில் கையெழுத்து போட்ட சீதா.. ராம் கொடுக்கும் அதிர்ச்சி - சீதா ராமன் இன்றைய எபிசோட்

சீதா ராமன் சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.

Continues below advertisement

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் நான்ஸி சவாலை ஏற்பதாக சீதா சொல்லிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Continues below advertisement

அதாவது, சீதா சவாலில் தோற்றால் ராமை விவாகரத்து செய்து பிரிவதாக ஒப்புக்கொண்டு கையெழுத்து போடுகிறாள். பிறகு ராஜசேகர் ராமிடம் இந்த விஷயத்தை சொல்லி என் பொண்ணு லூசு மாப்ள, அவ எப்படியும் தோற்கத்தான் போறா என்று சொல்ல ராம் கோபமாக வீட்டுக்கு வருகிறான்.

சீதாவை பார்த்து உனக்கு என்ன தெரியும்னு கையெழுத்து போட்ட எதுக்கு சவால் முடியும் வரைக்கும் காத்திருக்கணும்? இப்போவே வீட்டை விட்டு போயிடு என கோபம் அடைய சீதா சமாதானம் செய்ய முயற்சி செய்ய ராம் கோபம் குறையாமல் இருக்கிறது.

பிறகு சீதா கீழே வரும் போது ராமின் தங்கைகளும் உனக்கு என்ன தெரியும்னு கையெழுத்து போட்ட என்று கேள்வி கேட்க எனக்கு துணையாக முத்தாரம்மன் இருப்பா என்று சொல்லி படுக்க சென்று விடுகிறாள். இரவு சீதா அசந்து தூங்கி கொண்டிருக்க கொலுசு சத்தம் கேட்டு கண் திறக்க முத்தாரம்மனா வந்து நிற்கிறார். என் கூட வா என மகாவின் கல்லறைக்கு அழைத்து சென்று சமாதியை தட்டி காட்ட சீதா புரியாமல் நிற்கிறாள்.

நான்சியும் மொட்டை மாடியில் இருந்து இது அனைத்தையும் பார்க்க அவளுக்கு சீதா மட்டும் தான் தெரிகிறாள். இப்படியான நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலின் இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். 

Continues below advertisement
Sponsored Links by Taboola