மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் ரங்கநாயகியால் யமுனாவின் கல்யாணம் நின்று போன காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 


முன்னதாக ரங்கநாயகிக்கு  பீரோவில் இருந்த வீட்டு பத்திரம் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைகிறார். அப்போது புஷ்பா சக்தி தான் வீட்டு பத்திரத்தை வைத்து, கல்யாணத்துக்கு நகை வாங்கிய விஷயத்தை போன் செய்து சொல்கிறாள். இதனையடுத்து நகைக்கடைகாரரை மிரட்டி உண்மையெல்லாம் தெரிந்து கொண்ட ரங்கநாயகி, மண்டபத்திற்கு வரும் காட்சிகள் நிகழ்ந்தது. 


இன்றைய எபிசோடில் ரங்கநாயகி வந்து பத்திரத்தை கேட்க முதலில் சக்தி இது எங்கள் பத்திரத்தை வைத்து தான் பணம் வாங்கினோம் என்று சொல்கிறார். ஆனால் நகை கடைக்காரர் அது ரங்கநாயகியின் பத்திரம் தான் என்று கூறுகிறார். உடனே சக்தி, வெற்றி தான் நகையும், பணமும் கொடுக்க சொன்னார். இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சொன்னார் என்று தெரிவிக்கிறாள். ஆனால் வெற்றியோ,  நான் உதவி செய்யத்தான் சொன்னேன். பத்திரத்தை மாற்றியது நான் இல்லை என்று தெரிவிக்க, பூஜா ரங்கநாயகியை ஏற்றிவிட்டு சண்டையை மேலும் பெரிதாக்குகிறாள்.


இதனால் டென்ஷனான மீனாட்சி, இதற்கெல்லாம் காரணம் சக்தி தான் என கூறி அவளை திட்டுகிறார். இதற்கிடையில் புஷ்பா நகைக்கடைக்காரரிடம் நகையை திருப்பி வாங்குங்கள் என்று கூற, யமுனா தான் அணிந்திருந்த நகைகளை எல்லாம் திருப்பிக் கொடுத்து விடுகிறாள். மீதி நகையை போட்டு இருக்கும் கோகிலாவும் எல்லோர் முன்னாலும் அவமானப்பட்டு நகையை கழட்டி கொடுக்கிறார்.


மீதமுள்ள 25 லட்சம் பணத்தையும் ரங்கநாயகி கேட்க, அதை கொடுத்து விடுகிறோம் என்று சக்தி நிலைமையை சமாளிக்க முயற்சிக்கிறார்.  ஆனால் இன்னும் ஒரு மணி நேரத்தில் என் பத்திரம் வந்தாக வேண்டும் என்று ரங்கநாயகி சொல்லி விட்டு புறப்பட்டு போகிறாள். இதையெல்லாம் வெற்றி தான் செய்திருப்பான் என்று சக்தி கோபத்தில் திட்டுகிறாள்.


மேலும் கோகிலாவிடம் கல்யாணத்தை நிறுத்த வேண்டாம் என்று காலில் விழுந்து கெஞ்சுகிறாள். தொடர்ந்து பத்திரத்தை மாற்றிக் கொடுத்துவிட்டு நகை,பணத்தை நான் ஏற்பாடு செய்கிறேன் என்ற பொறுப்பு எடுத்துக் கொண்டு வேகமாக வீட்டுக்கு செல்கிறாள். 


ஆனால் ரங்கநாயகி சக்தியை வீட்டுக்குள் அனுமதிக்க மறுக்கிறாள். என் பத்திரத்தை தேடி கொடுத்து விட்டு உங்கள் பத்திரத்தை வாங்கிக் கொண்டு வந்து விடுகிறேன் என்று சொல்லியும் ரங்கநாயகி சக்தியை வீட்டில் இருந்து வெளியே தள்ள, சக்தி ஒன்றும் செய்ய முடியாமல் பரிதவித்து நிற்கும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.