மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் சங்கிலியை சந்திக்கும் திடியன், கிரி இருவரும் மீனாட்சி வீட்டில் நடந்த அனைத்தும் நாடகம் என்று குழப்பி விடும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 


தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் மீனாட்சியாக அர்ச்சனா நடிக்கிறார். இவருக்கு யமுனா, சக்தி, துர்கா ஆகிய மூன்று மகள்கள். தங்களை விட்டுச் சென்ற கணவருக்கு, எதிராக மீனாட்சியும், தந்தைக்கு எதிராக அவரது மகள்களும் வாழ்ந்து காட்டுவதே இந்த சீரியலின் கதைச் சுருக்கமாகும். 


நேற்றைய எபிசோடில் சங்கிலி, புஷ்பா என இருவரும் நீதிமணியுடன் மீனாட்சி வீட்டிற்கு வந்து சக்தி எங்கே என்று விசாரிக்க, மீனாட்சி மற்றும் துர்கா அவர் வெளியே சென்று இருப்பதாக சொல்லி சமாளிக்கிறார்கள். ஆனால் சங்கிலி அதை நம்பாமல் பிடிவாதமாக சக்தி வெற்றியுடன் வீட்டை விட்டு ஓடிவிட்டாள் என்று சண்டை போடுகிறார்.


தொடர்ந்து புஷ்பா மீனாட்சியிடம் நீ வேண்டுமென்றே வெற்றியுடன் சக்தியை அனுப்பி வைத்து விட்டாய் இந்த கல்யாணத்தில் உனக்கு இஷ்டமில்லை என்று சொல்லி பேச, மீனாட்சி வீட்டிற்குள் சென்று மண்ணெண்ணெய் கேனுடன் வருகிறார்.  மறுபக்கம் மருத்துவமனையில் யமுனா தாலியை எடுத்துக் கொடுத்து சக்தியின் கழுத்தில் வெற்றியை கட்டச் சொல்கிறாள். வெற்றி, சக்தி இருவரும் தடுமாற்றத்துடன் நிற்க இங்கே மீனாட்சி மண்ணெண்ணெய் கேனை வைத்து கொண்டு, சக்தி வராவிட்டால் தான் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திக் கொள்வதாக சொல்லும் காட்சிகள் இடம் பெற்றது. 






இன்றைய எபிசோடில் யமுனா தாலியை வெற்றியின் கையில் கொடுத்து சக்தியின் கழுத்தில் கட்ட சொல்லி வற்புறுத்துகிறாள்.அப்பொழுது அங்கு வரும் துர்கா பதட்டத்துடன் மீனாட்சி அம்மா கையில் மண்ணெண்ணெய் கேனுடன் இருப்பதாகவும்,  நீங்கள் வராவிட்டால் கொளுத்திக் கொள்வதாக முடிவு செய்துள்ளதாகவும் குறிப்பிடுகிறார். மேலும் சங்கிலி சக்தி வீட்டை விட்டு ஓடி விட்டாள் என்று குற்றம் சாட்டியதாகவும் சொல்கிறாள். உடனே மூவரும் ஆட்டோவில் கிளம்பி வீட்டிற்கு வந்து இறங்குகின்றனர்.


இதனைத் தொடர்ந்து சக்தி மீனாட்சியிடம் காய்கறி நறுக்கும் பொழுது யமுனாவின் கையில் கத்தி அறுத்து விட்டதால் மருத்துவமனைக்கு சென்றதாக சொல்கிறாள். உடனே மீனாட்சி புஷ்பாவிடம் கோபமாக, என்ன சூழ்நிலை என்றே தெரியாமல் சக்தியை பற்றி அவதூறாக பேசியதை குறிப்பிட்டு திட்டுகிறார். சங்கிலியையும் திட்டி அவமானப்படுத்தி அனுப்புகிறார்.


இதனால் அப்செட்டாக வரும் சங்கிலியை சந்திக்கும் திடியன், கிரி இருவரும் மீனாட்சி வீட்டில் நடந்த அனைத்தும் நாடகம் என்று குழப்பி விடுகின்றனர். பின்னர் நீதிமணி, புஷ்பா இருவரும் சங்கிலியை வழியில் சந்தித்து விசாரிக்க, சக்தி தப்பு பண்ணியதாக சொல்கிறான். ஆனால் இந்த கல்யாணம் நடக்காவிட்டால் என்னை உயிரோடு பார்க்க முடியாது என்று புஷ்பா சொல்லிவிட்டு கிளம்பி செல்வதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.