மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் போதையில் சக்தியிடம் சங்கிலி தவறாக நடக்க முயற்சிக்கும் காட்சிகள் இடம் பெறுகிறது. 


தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் மீனாட்சியாக அர்ச்சனா நடிக்கிறார். இவருக்கு யமுனா, சக்தி, துர்கா ஆகிய மூன்று மகள்கள். தங்களை விட்டுச் சென்ற கணவருக்கு, எதிராக மீனாட்சியும், தந்தைக்கு எதிராக அவரது மகள்களும் வாழ்ந்து காட்டுவதே இந்த சீரியலின் கதைச் சுருக்கமாகும். 


முன்னதாக கோயிலில் சக்திக்கு எடைக்கு எடை பணம் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வு நடக்கிறது. இதில் அனைவரும் பணம் வைத்தும் தராசில் முள் நகராமல் இருக்கிறது. இதனையடுத்து வெற்றி வைக்கும் போது முள் நகரும் காட்சிகள் இடம் பெற்றது. இருவரும்  சொல்லாமலேயே பார்வையில் தங்கள் காதலை வெளிப்படுத்தி வருகின்றனர். 


இதனையடுத்து இன்றைய எபிசோடில் மீனாட்சி வீட்டின் பின்புறம் இருக்கும் சாமி சிலையின் அருகில் உட்கார்ந்து சங்கிலி மற்றும் நண்பர்கள் மது அருந்தி கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு வரும் நீதிமணி சங்கிலியை பார்த்து கல்யாண நடக்கும் வேளையில் ஏன் இப்படி குடிக்கிறாய் என திட்டுகிறார். மேலும் மீனாட்சி வந்தால் பிரச்சனை ஆகிவிடும் என்று சொல்ல,  சமாளித்துக் கொள்ளலாம் என்று சங்கிலி சொல்லும் நேரத்தில் மீனாட்சி அங்கு வருகிறார்.






உடனே நீதிமணி அங்கிருந்து கிளம்பி செல்ல, சங்கிலி குடித்துக் கொண்டிருப்பதை பார்த்த மீனாட்சி கோபப்பட்டு அனைவரையும் திட்டுகிறாள்‌. அவர்கள் மீனாட்சியை பதிலுக்கு கிண்டலாக பேசுகின்றனர்.  அப்போது சங்கிலி நண்பன் ஒருவனை பாம்பு கடித்து விட அனைவரும் அவனை ஹாஸ்பிடலுக்கு தூக்கிச் செல்கின்றனர்.


மறுபக்கம் வெற்றி வீட்டில் தன் போனில் சக்தி போட்டோவை பார்த்துக் கொண்டு ஒரு கையில் சக்தி கிப்டாக கொடுத்த தாஜ்மஹாலை வைத்து பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் பூஜா வெற்றியிடம் கிண்டலாக பேசிவிட்டு செல்கிறார். பின்பு மீண்டும் வந்து வெற்றியின் போனில் இருக்கும் போட்டோவை பார்க்க அது சக்தியின் போட்டோ என்று தெரிந்து கோபப்படுகிறார். உடனே வெற்றி போனை புடுங்கி பூஜாவை திட்டுகிறான். பதிலுக்கு பூஜா திருமணத்திற்கு பின் தன்ராஜ்யம் தான் என்று எச்சரித்து விட்டு செல்கிறார்.


பின்னர் பூஜாவின் அம்மா அவரிடம் வெற்றிக்கு பாலில் மயக்க மருந்து கலந்து கொடுக்க சொல்கிறார். அதன்படி பூஜா  வெற்றியிடம் கொடுக்க அவர் வேண்டாம் என மறுக்கிறார். தான் ரங்கநாயகியை கூப்பிடுவேன் என்று பூஜா மிரட்ட, வெற்றி வேறுவழியில்லாமல் பாலை வாங்கி குடித்து விட்டு அங்கிருந்து கிளம்பி சென்று விடுகிறார்.


இதனிடையே சங்கிலி நண்பர்களுடன் போதையில் மீனாட்சி வீட்டில் பின்புறம் நிற்கும் பொழுது, மீனாட்சியை தேடி சக்தி டார்ச்சுடன் அங்கு வருகிறார். சக்தியிடம் திருமணத்திற்கு முன் அத்துமீற நினைக்கும் சங்கிலி ஒரு துணியை எடுத்து தன் முகத்தை மறைத்துக் கொண்டு சக்தியை நோக்கி வரும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.