Maari Serial: சூர்யா வைத்த ட்விஸ்ட் - மாரி சீரியல் இன்று நடக்கப்போவது என்ன தெரியுமா?

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் மாரி.

Continues below advertisement

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஜெகதீஸ் துப்பாக்கியை வைத்து கொண்டு மார்க் ஆண்டனியை உண்மையை சொல்ல சொல்லி மிரட்டிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Continues below advertisement

அதாவது தாரா ஜெகதீஷுடன் சண்டையிட்டு துப்பாக்கியை கைப்பற்றி அவரையே சுட்டு தள்ள ஜெகதீஷ் சரிந்து விழுகிறார், மாரிக்கு வந்த விஷனால் சூர்யா ஜெகதீஷை தேடி வர அங்கிருந்து எல்லாரும் எஸ்கேப் ஆக சூர்யா ஜெகதீஷ் சரிந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து ஹாஸ்பிடலில் அட்மிட் செய்கிறான். டாக்டர் ரொம்ப சீரியஸ் கண்டிஷன் தான் எதுவாக இருந்தாலும் 24 மணி நேரத்திற்கு பிறகு தான் சொல்ல முடியும் என்று சொல்கிறார். 

மறுபக்கம் தாரா DNA டெஸ்ட் ரிசல்ட்டை மாற்றி வைக்க ஏற்பாடு செய்த நர்ஸ்க்கு போன் போட்டு மார்க் ஆண்டனியை அவங்க வீட்டில் தங்க வைக்க ஏற்பாடு செய்கிறாள். அடுத்து சூர்யா வீட்டிற்கு வந்து ஜெகதீஷ் ஹாஸ்பிடலில் இருக்கும் விஷயத்தை சொல்ல அதை கேட்டு எல்லாரும் பதற தாராவும் சங்கரபாண்டியும் பதறுவது போல் ட்ராமா போடுகின்றனர். 

அதை தொடர்ந்து ஜெகதீஷ் ஹாஸ்பிடலில் இருக்க அங்கு மூன்று பேர் கருப்பு முகமூடியுடன் வந்து ஜெகதீஷை கடத்தி செல்கின்றனர், நர்ஸ் போன் போட்டு இந்த விஷயத்தை சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைய தாரா நான் சொன்ன மாதிரியே கருப்பு உருவம் ஜெகதீஷை கடத்தி இருக்கு சந்தோசப்பட்டு போன் போட கருப்பு உருவம் நான் இப்போ தான் ஹாஸ்பிடல் கிளம்பிட்டு இருக்கேன் என்று சொல்ல தாரா அப்போ கடத்தியது யார் என குழப்பம் அடைகிறாள். 

அடுத்து சூர்யா போலீஸ் இன்ஸ்பெக்டர் நெடுமாறன், மேலும் ஒரு போலீஸ் என மூன்று பேரும் தான் ஜெகதீஷ் நலம் கருதி அவரை கடத்தினார்கள் என்பது தெரிய வருகிறது. மேலும் ஜெகதீஷை டூப்ளிகேட் ஸ்ரீஜா, தினேஷ் வீட்டில் தங்க வைக்க ஏற்பாடும் செய்கின்றனர். வீட்டிற்கு வந்த சூர்யாவிடம் ஜெகதீஷை யாரோ கடத்திட்டாங்க என்று நடந்த விஷயத்தை சொல்ல அவனும் பதறுவது போல் நடிக்கிறான்.

அடுத்து ரூமுக்குள் வந்ததும் அப்பாவை கடத்தியது நான் தான் என்று உண்மையை சொல்கிறான். இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம் என்று சொல்லும் சூர்யா தாரா அம்மா தான் சோகமா இருப்பாங்க அவங்களுக்கு மட்டும் ஒரு வார்த்தை சொல்லிடலாம் என்று சொல்ல மாரி அவங்களுக்கும் தெரிய வேண்டாம் என்று தடுத்து விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

Continues below advertisement
Sponsored Links by Taboola